articles

img

மதச்சார்பின்மை எனும் அஸ்திவாரம் - சுனில் பி.இளயிடம்

‘‘இந்தியா’’ எனப் பெயரிட்ட அம்பேத்கர்

புதிய தேசத்தின் பெயரைச் சொல்லி அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களிலேயே தேசிய சிந்தனையை மதச்சார்பற்றதாக உறுதிசெய்வதன் அடையாளங்கள் உண்டு. பாரதம், இந்துஸ்தான், பாரதவர்ஷம் என்றவாறு பல பெயர்களும் அன்று ஆலோசிக்கப்பட்டன. ஆனால், அம்பேத்கர் முன்வைத்த ‘இந்தியா’ அல்லது ‘பாரதம்’ என்ற பெயரைத்தான் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. மதரீதியான அடையாளம் உள்ளதும், இதிகாசத் தன்மையுள்ளதுமான பெயர்களுக்குப் பதில் நிலப்பிரதேச அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததும் வரலாற்றுப் பரிணாமங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டதுமாகிய ‘இந்தியா’ என்ற பெயர்தான் தேசத்தின் பெயராக அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார்பின்மை தான் இந்தியா எனும் தேசத்திற்கு அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தமாக அர சியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங்களில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டது போல் மதச்சார்பின்மை இல்லையென்றால்  அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைக்கிற மற்ற  எல்லா சிறப்பு அம்சங்களும் பொரு ளற்றதாகப் போகும். மதச்சார் பின்மை என்பது அந்த அளவுக்கு ஆழமாக நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இரத்த சம்பந்தமுள்ளதாக இருக்கிறது - உயிருள்ள உடலின் சுவாசக் காற்று போல! அரசியல் அமைப்புச் சட்டம் இந்துத்துவவாதிகளுக்கு கண்ணில் விழுந்த தூசியாக உறுத்துகிறது. காரணம் வேறு ஏதும் இல்லை.  மதச்சார்பின்மைச் சிந்தனையை  ஒழிப்பதற்குக் கடந்த எழுபது ஆண்டு களாக அவர்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கடுமையாக முயற்சி செய்துவருகிறார்கள். மதச் சார்பின்மை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியமான அம்சம் அல்ல என்று வாதிப்பதற்கு இந்துத்துவ மதவாதிகள் காலங்கால மாக எழுப்பி வருகிற ஒரு வாதம், ஆரம்பத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் மதச்சார் பின்மை என்ற சொல் இருக்கவில்லை என்பதாகும். 1975-ல் 42-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம்  இந்திராகாந்திதான் அதை முக வுரையில் சேர்த்தார் என்றும், அது  மேற்கத்திய சிந்தனை என்றும் தொட ர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையின் அடிப் படை அம்சத்திற்குச் செல்வதற்கு உத வுகிற  இரண்டு விஷயங்கள் நம் முன் உள்ளன. அவற்றில் முதலாவது 1973-ன் கேசவானந்த பாரதி வழக்கா கும். 1975-ல் செய்யப்பட்ட திருத்தத் திற்கு முன்புதான் உச்சநீதிமன்றத் தின் அரசியல் அமைப்புச் சட்ட அம ர்வு கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நாடாளுமன்றத் தில் இருக்கிற பெரும்பான்மையின் பேரால் அரசியல் அமைப்புச் சட்டத் தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் திடமான தீர்ப்பு வழங்கியது. இந்த  அடிப்படை அம்சத்தின் ஒரு பகுதி தான் மதச்சார்பின்மை என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகச் சொல்லவும் செய்தது. பாபர் மசூதியைத் தகர்த்த தைத் தொடர்ந்து, அதற்கு ஆதர வாகச் செயல்பட்ட மாநில அரசு களைக் கலைத்தது சரிதான் என்று நீதிமன்றம் சொன்னதும் இதன் அடிப்படையில்தான்.  

ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை 

அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர இந்தியாவின் மதச்சார் பின்மை அம்சத்தைக் குறித்து விரி வான அளவில் விவாதங்கள் நடை பெற்றன என்பது உண்மை. தேசம்  மதவிஷயங்களிலிருந்து முழுமை யாக விலகியிருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் உள்ள மதச்சார்பின்மை சிந்தனை இந்தியாவில் நடைமுறை க்கு ஏற்றதல்ல என்ற நிலைபாட்டை யே  அரசியல் நிர்ணயசபை ஆரம்பத் தில் பின்பற்றியது. 565 குறுநில மன் னர்களின் பிரதேசங்களும், 13 பிரிட்டிஷ் மாகாணங்களும், எட்டு மதங் களும் எண்ணற்ற சாதிகளும் மொழி களும் இனக்குழுச் சமூகங்களும் உள்ள இந்தியாவில் அரசாங்கம் மதவிஷயங்களில் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை என்ற நிலை வந் தால் அது சிறுபான்மையினரின் ஜன நாயக உரிமைகளையே இல்லாமற் செய்துவிடும்; அரசியல் சட்டம் தீண்டாமைக்குத் தடைவிதித்ததும், நாடாளுமன்றம் இந்து விதிகள் மசோ தாவை அங்கீகரித்ததும் எல்லாம் நல்ல மாற்றத்திற்கான வாய்ப்பின்  அடிப்படையில்தான். எல்லா மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சமமான உரிமை அதிகாரங்கள் உள்ள தேசமாக இந்தியா நிலைப் பெற்றிருக்க வேண்டுமென்றால் ஆக்கப்பூர்வமான மதச்சார் பின்மைக் கொள்கையை தேசம் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருந்தது.  1920கள் வரை நடைமுறையில் இருந்ததும், பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலைமை வகித்தது மாகிய ‘மதஆத்மக’ தேசிய சிந்தனை யைப் புறந்தள்ளிக் கொண்டு காந்தி ஜியின் தலைமையில் உருவாகிவந்த மதச்சார்பற்ற தேசிய சிந்தனைதான் இந்தியாவைச் சுதந்திரத்தை நோக்கி இட்டுச்சென்றது. அதன் சிறப்பு அம்சங்கள்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பிரகாசிக்கிறது.

மதச்சார்பின்மை குறித்த வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிப்பீடு செய்துதான் ஆக்கப்பூர்வ மான மதச்சார்பின்மை என்ற சிந்த னைக்கு அரசியல் நிர்ணயசபை வந்தது. அரசியல் நிர்ணயசபை இது சம்பந்தமான மூன்று கண்ணோ ட்டங்களையாவது பிரதிபலித்திருக் கும். மதச்சார்பின்மை என்கிற கருத் தை முன்வைத்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் அதற்கு வழங்கிய ‘மதச்சார்பற்ற தார்மீகம்’ என்கிற கருத்துதான் முதலாவது. இது மேற் கத்திய மதச்சார்பின்மை சிந்தனை க்கு அஸ்திவாரம் போட்ட கருத்தாகும்.  மறுபுறம், கலாச்சார தேசியம் என்ற  கருத்தின் மறைவில் மததேசிய வாதத்தை உயர்த்திய இந்துத்துவ மதவாத நிலைபாடும் அரசியல் நிர்ணயசபையில் பிரதிபலித்தது. இத்துடன், காந்திஜியின் ‘சர்வ தர்ம சமபாவன’ என்று சொல்லப்பட்ட, ‘எந்த மதத்தோடும் வெறுப்பு இல்லாமல் இருப்பது’ என்ற கண்ணோட்டமும் உருவானது. இந்த மூன்றாவது கண்ணோட்டத்தைத்தான் அரசியல் நிர்ணசபை ஏற்றுக்கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பூரண மாக ஒன்று கலந்த மதச்சார்பின்மை யின் அடிப்படையும் இதுதான். அரசியல் அமைப்புச் சட்டத்தின்  அடிப்படைத் தன்மை மதச்சார் பின்மையில் உறுதியாகக் காலூன்றி யது என்கிற உண்மையை அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட பல பிரிவு களும் தெளிவுப்படுத்துகின்றன. சட்டத்தின் முன் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று அறிவிக்கிற 14-வது பிரிவும், சாதியின், மதத்தின் பேரால் வேற்றுமை கூடாது என்று அறிவிக்கிற 15-வது பிரிவும் அர சியல் அமைப்புச் சட்டத்திற்கு மதச் சார்பின்மையின் வலுவான அஸ்தி வாரத்தைக் கட்டமைக்கிறது. அது போல்தான் மதநம்பிக்கையாளர் அனைவருக்கும் அவரவர் நம்பிக்கையை அறிவிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் 25-வது பிரிவு உரிமை வழங்குகிறது. இதற்குப் பிறகு வருகிற 26-வது பிரிவு வெவ் வேறு மதப்பிரிவினர்க்கு மதநிறு வனங்கள் நடத்துவதற்கும், சொத்து சேகரிப்பதற்கும், அதைக் கையாளு வதற்கும் உரிமை வழங்குகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்ட ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற தன்மையை உறுதி படக் கூறுகிறவை என்று 1962-லேயே உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அரசியல் நிர்ணய  சபையின் வரலாறு 

உண்மையில் வரலாற்றின் எத்தனையோ கட்டங்களுக்குப் பின்னர்தான் இந்திய அரசியல் சட்டம் என்ற கருத்து அரசியல் நிர்ணய  சபையில் வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கு வதற்கான முயற்சியின் வரலாறு அதன் மிகநீண்ட பயணத்தை நன் றாக வெளிப்படுத்துகிறது. 1895-ல்  சுதந்திர மசோதா, 1925-ல் இந்துஸ் தான் சோஷலிஸ்ட் குடியரசு அஸோ ஸியேஷன் தயாரித்த அரசியல் அமை ப்புச் சட்ட நகல், 1927-ல் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பின்போது தயாரிக்கப்பட்ட  நேரு ரிப்போர்ட், 1935-ல் இந்திய அரசுச் சட்டம், 1944-ல் எம்.என்.ராய் தயாரித்த நகல், 1945-ல் நாராயண் அகர்வால் தயாரித்த காந்தியன் அரசியல் அமைப்புச் சட்டம் என இவ்வாறு எத்தனையோ முந்தைய கால முயற்சி கள் அரசியல் நிர்ணயசபைக்கு உண்டு.

மூலப் பிரதியின் வடிவமைப்பு

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைப்பிலேயே உள்ளார்ந்த மதச்சார்பின்மையின் முத்திரையைக் காணமுடியும். காலிக்ராஃபிஸ்டாகிய பிரேம் பெஹாரி நாராயண் ரெய்ஸாதாவின் கையெழுத்தில் எழுதித் தயாரிக்கப் பட்டதுதான் இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மூலநூல். 1,17,369 சொற்கள் உள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உலகிலேயே மிகப்பெரிய அரசியல் அமைப்புச் சட்டங்களில் ஒன்று. தேசிய இயக்கத்தில் பங்கேற்றதுடன் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்காக  போஸ்டர்கள் வரையவும் செய்த  நந்தலால் போஸின் தலைமையில் தான் அரசியல் அமைப்புச் சட்டத் தின் பக்கங்கள் சித்திர வேலைப்பாடு களால் அலங்காரம் செய்யப்பட்டது டன், கோட்டுச் சித்திரங்கள் சேர்க்கவும் பட்டன.  அசோக ஸ்தம்ப சிற்பத்தின்,  தர்மசக்கரத்தின் சித்திரங்களுடன் தான் அது ஆரம்பமாகிறது. அடுத்து  அரசியல் அமைப்புச் சட்டத்தின் புகழ்பெற்ற முகவுரை அமைந்துள் ளது. ஒன்றாம் பாகத்தில் ஹரப்பா முத்திரைகள் ஒன்றின் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. இந்தியக் கலாச்சாரத்தின் மிகப் பழ மையான சின்னத்திலிருந்து அர சியல் அமைப்புச் சட்டம் ஆரம்ப மாகிறது. அடுத்த பாகங்களில் வேத காலத்தின், மகாபாரதம், இராமா யணக் கதைச் சம்பவங்களின் சித்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்தாம் பாகத்தின் ஆரம்பத்தில் புத்தர் சித்திரத்தையும், பதினான்காம் பாகத்தின் ஆரம்பத்தில் அக்பர் சபையின் கோட்டுச் சித்திரத்தையும் பார்க்கலாம். பதினாறாம் பாகத்தின் ஆரம்பத்திலுள்ள சித்திரங்களில் ஒன்று திப்புசுல்தான் சித்திரமாகும். மற்றொன்று ஜான்ஸிரா  சித்திரம். இதற்குப் பின்னால் நந்தலாஸ் போஸ் வரைந்த காந்திஜியின் பிரசித்திப் பெற்ற கோட்டுச் சித்திரம் வருகிறது. பதினேழாம் பாகத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு இந்தியாவின் கலாச்சார வரலாற்றின் வளர்ச்சி நிலையும், அதன் பன்முகமும் மதப்பன்மையும் ஒன்றுபடுத்தப்பட்ட நிலையில்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம்

1946 டிசம்பர் 11 அன்று பகல் 1 மணிக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தை ஆச்சார்ய கிருபளானியும் மௌலானா அபுல் கலாம் ஆஸாதும் சேர்ந்து தலைவர் பதவிக்கு அழைத்து வந்தனர். அப்போது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர்: ‘‘இன்குலாப் ஜிந்தாபாத்! ஜெய்ஹிந்த்!’’ 1921-ல் அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முதன்முறையாக முன்வைத்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி உருவாக்கிய ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்கிற முழக்கமும், சுபாஷ்சந்திர போஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஜைனுல் அப்தீன் ஹஸன் உருவாக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்கிற முழக்கமும் எழுப்பப்பட்ட சூழலில்தான் அரசியல்  நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பதவி யேற்றார்.  இந்தியா என்கிற எதிர்கால தேசத்தின் இயல்பான அடையாள மாகவும் இருந்தது அந்தப் பதவியேற்பு நிகழ்வு. விடுதலையை முன்னறிவித்த இந்த மகத்தான நிகழ்வு இந்திய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் திகழ்ந்தது.

நன்றி : தேசாபிமானி மலையாள நாளிதழ்

- தமிழில்: தி.வரதராசன்