articles

img

உறுதியான மதச்சார்பின்மை கேரளாவின் தனித்தன்மை

கேள்வி: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது. உங்களுக்கு வந்துள்ள செய்திகள் எவ்வாறு உள்ளன?

பினராயி விஜயன்: கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிரான கோபம் அதி கரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் மிகவும் நொந்து போயிருப்பது நன்றாகவே தெரிகிறது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பல பிரச்சனை களில் ஒன்றிணைந்திருக்கிறீர்கள். முதலமைச்சர்களிலேயே நீங்கள் மூத்தவர் என்ற முறையில் உங்கள் கவலைகள் என்ன?

பினராயி விஜயன்: ஒன்றா, இரண்டா? எண்ணற்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். இவற்றில் மிகவும் முக்கியமானது, கூட்டாட்சித் தத்துவம் குறித்து ஒன்றிய அரசாங்கம் சற்றும் கவலைப்படாததாகும். இத னால்தான் மாநிலங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. நமக்கு என்ன தேவை? வலுவான ஒன்றிய அரசாங்கமும், வளமான மற்றும் மகிழ்ச்சி கரமான மாநில அரசாங்கங்களுமாகும். ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒன்றிய அரசாங்கம், எந்தெந்த வழிகளில் எல்லாம் மாநில அரசாங்கங்களைக் கசக்கிப் பிழிய முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் அதனைச் செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள், ஒன்றிய அரசாங்கத்தின் பாகுபாட்டுடன் கூடிய போக்கையும், துன்புறுத்தல்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மாநில அரசாங்கங்களுக்கே உரிய பிரத்யேகத் துறைகளில் கூட ஒன்றிய அரசாங்கம் தலையிடுகிறது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களையும், உரிமைகளையும் ஒவ்வொன் றாகப் பறித்துக் கொண்டிருக்கிறது. கூட்டாட்சித் தத்துவம் அடிப்படையாக உள்ள ஓர் அமைப்பில் இதுமாதிரி நடக்கக்கூடாது. ஒன்றிய அரசாங்கத்தின் இத்தகைய போக்கிற்கு எதிராக நாங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தபோதிலும், அதைப்பற்றி அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. மேலும், ஒன்றிய அரசாங்கம் மற்றொரு விதத்தி லும் தலையிடுகிறது. மத்திய புலனாய்வு முகமைகளை இதற்காகப் பயன் படுத்துகிறது.மக்கள் இதனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்து, மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் ஆளுநர்களால் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டி ருக்கின்றன. ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் முகவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

 மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வடிவுகள் ஆளுநர்களால் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப் பட்டிருக்கும் பிரச்சனைக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம், சட்டமன்றத் திலேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. தெலுங்கானா அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. கேரளாவின் நிலைப்பாடு என்ன?

பினராயி விஜயன்: இதுமாதிரியான உத்திகளில் கேரள ஆளுநர் ஈடுபட மாட்டார் என நாங்கள் நம்புகிறோம். ஆளுநர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

 பாஜக, இப்போது கேரளாவை குறி வைத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்பொரு முறை கேரளாவை சோமாலி யாவுடன் ஒப்பிட்டிருந்தார். இப்போது கேரளாவில் பாஜகவிற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பினராயி விஜயன்: பாஜக ஆளும் கட்சியாக வளர்வதற்கு சில உத்திக ளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது தன் உத்திகளைக் கேர ளாவிலும் பயன்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நம் நாடு பல்வேறு வேற்றுமைகளுடன்  கூடிய ஒரு நாடாகும். எனினும் கேரளத்திற்கென்று தனித்தன்மை உண்டு. அதனால்தான் மலையாளிகள் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தத்தை வரவேற்கவில்லை.  இதனை பாஜகவும் இப்போது புரிந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் இப்போது கிறித்தவ சிறுபான்மையினரைத் தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் பாஜக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் நம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். பாஜக என்பது மற்ற கட்சிகளைப் போன்ற ஒன்று அல்ல. அது ஆர்எஸ்எஸ் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ள, அதன் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கட்சியாகும். அது ஆர்எஸ்எஸ்-ஆல் வகுத்தளிக்கப்பட்டுள்ள கொள்கைகளையே அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், தங்களுடைய எதிரிக ளாக மூன்று தரப்பினரைப் பிரகடனம் செய்திருக்கிறது. அதில் ஒன்று முஸ்லீம்கள், இரண்டு கிறித்தவர்கள். (மற்றொன்று, கம்யூனிஸ்டுகள்) பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயெல்லாம் சிறுபான்மையினர் எப்படி  நடத்தப்படுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இவ்வாறு தாக்குதல் நடத்துவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். கேரளம் இதற்கு நேரெதிரான மாநிலமாகும். எந்தவொரு சிறுபான்மையினரும் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்பதுபோன்ற உணர்வினை கேரளாவில் பெற்றிருக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது? கேரளாவில் பாஜக வின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்திட சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் வகுத்திருக்கிறீர்களா?

பினராயி விஜயன்: சிறப்புத் திட்டம் எதுவும் இங்கே அவசியம் இல்லை. கேரளாவில் நீண்ட நெடுங்காலமாகவே மதச்சார்பின்மைக் கொள்கை யைப் பின்பற்றி வந்துகொண்டிருக்கிறோம். அந்தக் கொள்கையின் காரண மாகவே கேரளம் தனித்தன்மையுடன் நிற்கிறது. இதுவே கேரளாவில் இடது சாரிகளின் பலமாகும். இதுவே கேரளாவில் மதச்சார்பின்மைக்கு மாபெரும் உத்தரவாதமாகும். இடதுசாரிகளைப் பலவீனப்படுத்த அவர்கள் முயற்சி கள் மேற்கொண்டு வருகிறார்கள். முன்பும் செய்தார்கள், இப்போதும் செய்கி றார்கள். அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. எந்தவிலை கொடுத்தேனும் மதச்சார்பின்மைக் கொள்கை இங்கே பாதுகாக்கப்படும். மக்களுக்கும் இது நன்கு தெரியும். எந்தவிதமான மதவெறி சூழ்ச்சித் திட்டங்களிலும் மக்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள் என்கிற உத்தரவாதம் இங்கே இருக்கிறது.

மத்தியப் புலனாய்வு முகமையின் நடவடிக்கைகளால் ஒருசில பாதிரியார்கள் பயந்துபோயிருப்பதாக, கிறித்தவர்களைக் கவர பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் கூட கட்டுரைகள் வெளிவந்தன. உங்கள் கருத்து என்ன?

பினராயி விஜயன்: பாஜக பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டி ருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மத்தியப் புலனாய்வு  முகமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. இது உண்மை. பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராகவும், இத்தகைய உத்திகளை அது  பயன்படுத்தலாம். இத்தகைய உத்திகளால் கேரள மக்கள் ஏமாந்துவிடு வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.

‘கேரளா ஸ்டோரி’ என்ற படம் தியேட்டர்களில் வெளியாகி இருக் கிறது. இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நீங்கள் எந்தவிதமான நட வடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?

பினராயி விஜயன்: இந்தப் படத்திற்கும் உண்மைகளுக்கும் எவ்விதச் சம்பந்த மும் கிடையாது. ‘லவ் ஜிகாத்’ பிரச்சனையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கம்கூட இந்தக் கோட்பாட்டை இப்போது மறுத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சரே ‘லவ் ஜிகாத்’ இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் படம் மக்கள் மத்தியில் பிரிவினை  உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத் துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. சமூகத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதுதொடர்பாக இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. முறையீடு இல்லாவிட்டாலும்கூட, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்குக் கட்டளை பிறப்பித்தி ருக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்தப் படம் குறித்தும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பின் அதனை நாங்கள் செய்வோம்.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி பாஜகவை எதிர்ப்பதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பினராயி விஜயன்: கேரளாவில் காங்கிரஸ், பாஜகவுடன் இருக்கிறது. கேரளாவைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் இதனை நன்கு அறிவார் கள். தேசிய நிலையுடன் ஒப்பிடும்போது இது ஒரு துரதிர்ஷ்டமான ஒன்றாகும். உண்மையில் காங்கிரஸ் கட்சி, இங்கே அதன் அகில இந்திய கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இருந்துவருகிறது. கேரளாவில் மதச்சார்பின்மை மனோபாவத்துடன் உள்ள மக்கள், கேரளாவில் உள்ள காங்கிரஸ், பாஜகவைக் கழற்றிவிடும் என்று கருதவில்லை.

பினராயி விஜயன்: கேரளாவில் காங்கிரஸ், பாஜகவுடன் இருக்கிறது. கேரளாவைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் இதனை நன்கு அறிவார் கள். தேசிய நிலையுடன் ஒப்பிடும்போது இது ஒரு துரதிர்ஷ்டமான ஒன்றாகும். உண்மையில் காங்கிரஸ் கட்சி, இங்கே அதன் அகில இந்திய கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இருந்துவருகிறது. கேரளாவில் மதச்சார்பின்மை மனோபாவத்துடன் உள்ள மக்கள், கேரளாவில் உள்ள காங்கிரஸ், பாஜகவைக் கழற்றிவிடும் என்று கருதவில்லை.

பினராயி விஜயன்: தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்றால் என்ன? பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பதாகும். கேரளாவைப் பொறுத்தவரை பாஜக ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாது.  இங்கே பாஜகவிற்கு எதிராகப் பொது வேட்பாளர் என்ற பிரச்சனையே எழாது.

இடது ஜனநாயக முன்னணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இந்த இரண்டாண்டு களில் தவறுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக் கின்றனவே. கட்சியையும் அரசாங்கத்தையும் ஒருசேர மேற்பார்வை செய்து வருவதால் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறீர்களா?

பினராயி விஜயன்: தவறுகள் எதுவும் நடைபெறவில்லை. வேண்டு மென்றே இத்தகைய கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மத்திய புலனாய்வு  முகமைகள் எங்களுக்கு எதிராக ஏவப்பட்டன. எனினும் மக்கள் தீர்மான கரமான முறையில் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

ஆட்சியின் அடுத்த மூன்றாண்டு காலம் உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன?

பினராயி விஜயன்:நாங்கள் மக்களுக்கு அளித்துள்ள நிகழ்ச்சிநிரலைத் தொடர்வோம். நாங்கள், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். வளர்ச்சிப் பாதை என்பது மூன்றாண்டுகளுக்கு மட்டு மானது அல்ல. வளர்ச்சித் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகள், அடுத்த 25 ஆண்டுகள் எனத் திட்டமிட்டிருக்கிறோம். இத்துடன் மக்கள் நலத் திட்டங்க ளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். ஒரு பக்கத்தில்  வளர்ச்சி தேவை, மறுபக்கத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தேவை. இதனைத்தான் நாங்கள் அமல்படுத்திக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத் திலும் இவற்றைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

(நன்றி: டெக்கான் கிரானிக்கிள், மே 2, 2023) 
தமிழில்: ச.வீரமணி