பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா முடிவடைந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் அசாத்திய திறமை/ அவர்களை பயிற்றுவித்த தேசங்களின் அணுகு முறை/ இலக்கை மயிரிழையில் தவறவிட்ட ஏமாற்றம்/ வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட வேதனையும் அதன் விளைவாக தேசம் அடைந்த ஏமாற்றம்/ சில வீரர்க ளின் உன்னத அணுகுமுறை என வழக்கம் போல ஏராள மான நிகழ்வுகளுடன் இந்த ஒலிம்பிக்கும் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒட்டு மொத்த விளையாட்டு உலகை ஒப்பிடும் பொழுது ஏமாற்றம் தருகிறது. அதே சமயம் அடுத்த ஒலிம்பிக் கில் அதிக பதக்கங்களை பெறுவதற்கான சூழல்கள் உள்ளன எனும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.
பிரம்மாண்டமும் அதன் விலையும்
பாரீஸ் பிரான்ஸ் தேசத்தின் தலைநகரம். ஒரு வளர்ந்த தேசம் என்ற முறையில் இந்த ஒலிம்பிக் போட்டி யை நடத்தி முடிக்க பிரான்சுக்கு நிதி ஒரு பொருட்டாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த சுமார் 9 பில்லியன் யூரோ அதாவது ரூ.82,000 கோடி செலவாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பெரிய தொகை எல்லா தேசங்களுக்கும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே! இந்த செலவில் கணிசமான பகுதி பிரான்சின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு இந்தியா உட்பட 40 தேசங்களிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். ஏனெ னில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அடிப்படைவாத அமைப்பு கள் பயமுறுத்தலை வெளியிட்டிருந்தன. இந்த கால கட்டத்தில் இப்படி பல தேசங்கள் பங்கேற்கும் நிகழ்வு கள் எத்தகைய விழிப்புணர்வுடன் நடத்தப்பட வேண்டி யுள்ளது எனும் சவாலை இது வெளிப்படுத்துகிறது.
இந்தப் போட்டிக்காக 40,000 தொண்டர்கள் தேவைப்பட்டனர் என மதிப்பிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. 3,00,000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் குடும்ப/அரசியல்/சமூக பின்னணியை ஆழமாக ஆய்வு செய்து அதில் 40,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா போட்டிகளிலும் ஏற்படும் சில அதிருப்திகள் இந்தப் போட்டியிலும் உருவானது. தொடக்க நிகழ்வில் லியானார்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற இயேசு நாதர் பங்கேற்கும் “கடைசி இரவு உணவு” (The Last Supper) எனும் ஓவியத்தின் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கி பார்வையாளர்க ளின் மத்தியில் கொண்டுவந்த பொழுது அது கடு மையான கண்டனத்துக்கு ஆளானது. பல கிறித்துவ அமைப்புகளும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டிரம்பும் கிறித்துவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர் என விமர்சித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஒலிம்பிக் அமைப்பினர் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. ஒலிம்பிக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு தர்ம சங்கடம் உருவானது.
விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தில் குளிர்சாத னப் பெட்டிகள் வைக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கையான முறையில் குளிர் உண்டாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இது அனைவருக்கும் பயன்படவில்லை. எனவே இந்தியா உட்பட பல தேசங்கள் தமது சொந்த செலவில் குளிர்சாதனப் பெட்டிகள் வாங்கி னர். சில வீரர்கள் ஒலிம்பிக் கிராமங்களில் தரப்படும் உணவு திருப்தி தராததால் வெளியே போய் சாப்பிட்ட னர். நீச்சல் போட்டிகள் நடந்த ஒரு நதியில் பங்கேற்ற அனைவருக்கும் தோல் பாதிப்பு நோய்கள் உண்டா யின. எனவே அந்த போட்டிகளை வேறு ஒரு நதியில் நடத்த வேண்டியதாயிற்று. இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் பொதுவாக விளையாட்டு விழா வெற்றி கரமாக நடந்து முடிந்தது.
பெண்ணாகப் பிறந்தேன்; பெண்ணாக வாழ்கிறேன்
இரண்டு வீராங்கனைகளின் பாலின பிரச்சனை குறித்து பெரிய சர்ச்சைகளை உருவாக்கினர். ஒருவர் அல்ஜிரீயாவின் இமேன் கலிஃப். மற்றொருவர் தைவானின் லின் யு டிங். இவர்கள் இருவரும் இதற்கு முந்தைய சில போட்டிகளில் சில ஹார்மோன்கள் அதிகமாக இருந்ததால் பெண் பிரிவில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் குழுவினர் அந்த ஆய்வுகள் அநீதியானவை என குறிப்பிட்டு அவர்களை போட்டியில் பங்கேற்க வைத்தனர். இதனை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் மட்டு மல்லாது மில்லியன்கணக்கானவர்கள் சமூக ஊட கங்களில் இவர்களை இழிவுபடுத்தினர். இவர்களுக்கு எதிராக போட்டியில் கலந்து கொண்டவர்கள் X என விரல்களை காட்டி சோர்வடையச் செய்ய முயன்றனர். X என்பது பெண் பாலினத்தை குறிக்கும் குரோமோ சோம். Y என்பது ஆண் பாலினத்தை குறிக்கும் குரோமோசோம். நீ பெண் இல்லை; ஆண் என அவர்கள் இழிவுபடுத்த முயன்றனர்.
இமேன் கலிஃப் மற்றும் லின் யு டிங். இருவருமே தம்தம் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று பதிலடி தந்தனர். அதற்கு பின்னரும் அவர்களை இழிவு படுத்தும் செயல்கள் சமூக ஊடகங்களில் தொடர்கின் றன. மேலும் இவர்களை அனுமதித்த ஒலிம்பிக் குழுவையும் இழிவுபடுத்தினர். எனவே ஒலிம்பிக் குழு சார்பாக புகார் தரப்பட்டு காவல்துறையினர் நடவ டிக்கைகளை அறிவித்துள்ளனர். இமேன் கலிஃப் தங்கம் வென்ற பிறகு அவரை பேட்டி கண்ட பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிரெஞ்சு மொழியில் பேசுமாறு கூறினார். அந்த மொழி தெரிந்திருந்தும் அவர் அரபி அல்லது ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என கூறிவிட்டார். தம்மை இழிவுபடுத்திய மேற்கத்தியவர்க ளுக்கு அவர் தந்த பதிலடி இது! “நான் பெண்ணாக பிறந்தேன்; பெண்ணாக வளர்ந்தேன்; பெண்ணாக இந்த போட்டியில் பங்கேற்றேன்; பெண்ணாகவே வாழ்கிறேன்” என அவர் உறுதியாகக் கூறினார்.
சில நெகிழ்வான சம்பவங்கள்
l அதில் முக்கியமானது பாகிஸ்தானின் அர்ஷத் நதீம்மற்றும் இந்தியாவின் நீரஜ் சோப்ராவின் நட்பு. நதீமுக்கு ஈட்டி வாங்கக் கூட பணம் இல்லாத பொழுது நீரஜ் சோப்ரா அவருக்கு உதவினார். நீரஜ் சோப்ராவின் தாயார் நதீமும் எனது மகன் தான்என கூறினார். அதே போல நதீமின் தாயார் நீரஜ்சோப்ராவும் எனது மகன்தான் என கூறினார். இதுஇரு தரப்பு மக்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியைஏற்படுத்தியது.
l அமெரிக்காவின் வீராங்கனை சைமோன் பைல்ஸ் பிரேசிலின் ரெபெக்கா ஆண்டரெடிடம் தோல்வி அடைந்த பொழுது தலைவணங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் நீண்டநாள் எதிரெதிரேபோட்டியிடுபவர்கள்.
l 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாம்பியனான அமெரிக்காவின் நோஹா நைல்ஸ் ஜமைக்காவின்தாம்ப்சனை 1/5000 நொடி வித்தியாசத்தில் வென்றார்.
l டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்ற வட கொரிய வீரர்களும் வெண்கலம் வென்ற தென்கொரிய வீரர்களும் எடுத்த செல்ஃபி புகைப்படம் கொரியா முழுதும் வைரலானது.
l ஸ்கேட்டிங் பிரிவில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆரிசா ட்ரூவின் வயது 14தான்!
l இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை செங் ஹவோவின் வயது 11தான்!
l கியூபாவின் மிஜியன் லோபஸ் தொடர்ந்து 5ஆவதுமுறையாக மல்யுத்தத்தில் தங்கம் வென்று ஒலிம்பிக்சாதனை படைத்தார்.
l துருக்கியின் துப்பாக்கி சுடும் வீரர் யுசுஃப் டிகேக்சாதாரண டி ஷர்ட் அணிந்து விசேட கண்ணாடி எதுவும் இல்லாமல் வீதிகளில் விற்கும் கண்ணாடி அணிந்து எவ்வித படாடோபமும் இன்றி பங்கேற்று வெள்ளி வென்றார்.
இப்படி பலப்பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் அரங்கேறின.
இந்தியாவின் ஏமாற்றமும் நம்பிக்கையும்
வழக்கம் போல அமெரிக்காவும் சீனாவும் முதல் இரு இடங்களை வென்றுள்ளன. இரு தேசங்களும் தலா 40 தங்கங்கள் வென்றன. எனினும் அமெரிக்கா கூடு தலாக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றதால் முதலிடத்தை பெற்றது. ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி. ஒலிம்பிக்கில் அது தனி தேசமாக வரையறுக்கப்படுகிறது. ஹாங்காங் தனியாக 2 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. விளையாட்டு வீரர்களை பயிற்றுவிப்பது கூட தனி யார் கைகளில் தரப்படும் அமெரிக்கா ஒரு புறமும் விளையாட்டை ஒரு கடமையாக கருதி அரசே முழு மையாக விளையாட்டை ஊக்குவிக்கும் சோசலிச சீனா ஒரு புறமும் என இரு மாடல்கள் உள்ளன. எனினும் அமெரிக்க மாடலில் சாதாரண மக்கள் பெரும்பாலும் உயர் இடத்தை பிடிக்க இயலுவது இல்லை. ஆனால் சீனாவில் அப்படி அல்ல. திறமை படைத்த எவர் ஒரு வரும் உயர் இடத்தை அடைய இயலும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
இந்தியா 1 வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களை வென்று 71 ஆவது இடத்தை பெற்றது. தங்கம் வென்ற 61 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. 52 லட்சம் மக்களை மட்டுமே கொண்ட நியூசிலாந்து 10 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது. 96 லட்சம் மக்களை கொண்ட ஹங்கேரி 6 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்றுள்ளது. இப்படி பல நாடுகளை குறிப்பிடலாம். இவை பொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ந்த நாடுகள் என சிலர் கூறலாம். பிரிக்ஸ் நாடுகளான பிரேசில் 3 தங்கம் உட்பட 20 பதக்கங்களையும் தென் ஆப்பிரிக்கா 1 தங்கம் உட்பட 6 பதக்கங்களையும் வென்றுள்ளது. ரஷ்யா போட்டி களில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் தடைகளுக்கு ஆளாகி பல இன்னல்களை சந்திக்கும் கியூபா 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றுள் ளது. கென்யா/ ஜமாய்க்கா போன்ற ஏழை நாடுகளும் தங்கம் வென்றுள்ளன. 1.8 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஏழை நாடான செயிண்ட் லூசியா கூட தங்கம் வென்றுள்ளது. இந்த பின்னணியில் இந்தியா குறைவான பதக்கங்கள் பெற்றது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. கடந்த 20 வருடங்களில் இந்தியா வென்ற ஒலிம்பிக் பதக்கங்கள்:
அமெரிக்கா அல்லது சீனாவின் இடத்தைப் பிடிப்பது ஒருபுறம் இருந்தாலும் குறைந்தபட்சம் தங்கம் உட்பட 20 முதல் 25 பதக்கங்களை வெல்வதற்கு கூட இந்தியா விளையாட்டில் பன்மடங்கு கூடுதல் திட்டமிட லும் கவனமும் நிதியும் ஒதுக்க வேண்டியுள்ளது. விளை யாட்டு நிர்வாகத்தில் பாரபட்சமின்மையும் திறமையும் இருப்பது அவசியமாகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் சாக்சி மாலிக் அல்லது வினேஷ் போகத் தின் நிலை வரக்கூடாது. வில்வித்தையில் பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் நிர்வாகக் கோளாறு காரணமாக தென் கொரியாவை சேர்ந்த இந்திய முதன்மை பயிற்சியாளர் கூட பாரீஸ் செல்ல இயல வில்லை. இதனால் அந்த வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய பயிற்சியும் அறிவுரைகளும் கிடைக்க வில்லை. பதக்கங்கள் கை நழுவிப் போனதற்கு இது ஒரு முக்கியக் காரணம் என கருதப்படுகிறது. இப்படி பல நிர்வாகக் கோளாறுகள் பாதிப்பை உரு வாக்கியுள்ளன. எனினும் 6 பிரிவுகளில் இந்திய வீரர்கள் 4ஆவது இடத்தை பெற்றனர். இந்த வீரர்களை முறையாகப் பயிற்சிக்கு உள்ளாக்கினால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் இந்திய அரசு திட்டமிடுவது அவசியம் ஆகும்.