பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுவது, எதேச்சதிகார மோடி அரசாங்கத்தினால் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலின் ஒரு பகுதியேயாகும்.
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை, ‘உலகப் பத்திரிகை சுதந்திரம்’ அமைப்பு தன் அட்ட வணையில் துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டி இருக்கிறது. இந்த ஆண்டின் அட்டவணை மே 3 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம்தான் உலகப் பத்திரிகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (RSF-Reporters without Borders) அமைப்பானது, உலகப் பத்திரிகை சுதந்திர அட்டவணையைத் தயாரித்திருக்கிறது. உலகில் மொத்தம் உள்ள 180 நாடுகளில் இந்தி யாவை 161ஆவது இடத்தில் அது தர நிர்ணயம் செய்தி ருக்கிறது. இதில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம், 2022இல் 150ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை, கடந்த ஓராண்டிற்குள் இவ்வாறு 161ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகும். மேற்படி அட்டவணையில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: “பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல்ரீதியாக ஒருதலைப்பட்சமாக மாறிப்போன ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் ஒரே பக்கமாகச் சாய்ந்திருப்பது அனைத்தும் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.”
அரசின் அடக்குமுறை மற்றும் மிரட்டல்
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது அரசின் அடக்கு முறை மற்றும் மிரட்டல் ஆகும். ஒவ்வோராண்டும் ஊட கங்களின் சுதந்திரத்தை ஒடுக்கிடவும், பத்திரிகை யாளர்களின் சுதந்திரத்தை நசுக்கிடவும் மோடி அர சாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். சென்ற ஆண்டு, மீடியா ஒன் (Media One) என்னும் மலையாள தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமம் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டது. தேசியப் பாதுகாப்புப் பிரச்சனை களுக்காக அவ்வாறு ரத்து செய்யப்படுவதாகக் காரணம் கூறப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்ட தன் அடிப்படையில் இறுதியாக அந்த உத்தரவு கிழித்தெறியப்பட்டது. ஊடகங்களைத் தாக்குவதற்கான மற்றோர் உத்தி, அவற்றைத் துன்புறுத்தும் விதத்தில் அமலாக் கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் மூலமாக ஊடக நிறுவனங்களை சோதனை செய்வதாகும். பிபிசி செய்தி சேனல்களின் அலுவலகங்கள், வருமான வரித் துறையினரால் சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன. குஜராத்தில் 2002 கலவரங்கள் குறித்து ஓர் ஆவணப்படத்தை அது ஒளிபரப்பியதைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு, இந்த ஆவணப்படத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படா வண்ணம் தடை செய்வ தற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள் பிரயோகிக்கப்பட்டன.
வழக்குப்பதிவு, கொலை
ஒன்றிய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்க ளுக்கு எதிரானவை என்று கருதப்படும் செய்திகள் பிரசுரிக்கப்படும்போதெல்லாம், தேசத் துரோகக் குற்றப்பிரிவு உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ரத்னகிரியில் சசிகாந்த் வரிஷீ போன்ற கிரிமினல் குண்டர் கும்பல்களின் அராஜக நட வடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டபோது அதனைச் செய்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார் கள். அதனால்தான் மேற்படி அட்டவணை, பத்திரிகை யாளர்களின் நிலைமைகள் “மிகவும் மோசமாக” இருக்கும் நாடுகளில் கடைசி 31ஆவது நாடாக இந்தி யாவை, தரப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு இந்தியா மோசமான நாடுகளின் தரப்பட்டியலுக்கு வந்தி ருக்கிறது.
மிக மோசமான நிலைமை ஜம்மு-காஷ்மீரில்
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமான முறையில் நசுக்கப்படுவதும், தணிக்கை செய்யப்படுவதும் ஜம்மு-காஷ்மீரில்தான். அது, ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் யூனியன் பிரதேசமாக மாறியதிலிருந்தே நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது. காஷ்மீரிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் இணைய வழி ஊடகங்கள் மீது, திரும்பத் திரும்ப தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அங்கே சுதந்திரமான ஊடகம் என்பதற்கான சாத்தியக்கூறே இல்லை. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒருசில செய்தி நிறுவ னங்களும்கூட பலத்த பத்திரிகைத் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டின்கீழ்தான் வெளிவந்துகொண்டி ருக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இர்ஃபான் மெஹ்ராஜ் என்னும் இதழாளர், தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ)யால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழும், சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்சமயம் நான்கு பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் அனைவருமே பொதுப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் (Public Safety Act) அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பத்திரிகை தகவல் மையத்துக்கு அதிகாரமளிப்பு
நாட்டின் பிரதான பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கவனம் செலுத்திவந்த அரசாங்கம், இப்போது சிறிய அள விலான சுயேச்சையான செய்தி இணையதளங்களி லும், டிஜிட்டல் ஊடகங்களிலும் கவனத்தைத் திருப்பி இருக்கின்றன. இதற்காக 2021இல் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் (Information Technology (intermediary guidelines and digital media ethic code), விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இணைய தளங்கள் மூலமாக வெளிவரும் செய்தி ஊடகங்களின் செய்திகளையும் முறைப்படுத்திட முடியும், டிஜிட்டல் ஊடகங்களிலிருந்தும் சாராம்சங்களை நீக்கிட, தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆணை பிறப்பித்திட முடியும். பத்திரிகை தகவல் மையம் (Press Infor mation Bureau) சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டி ருக்கிறது. இந்தக்குழு செய்திகள் வெளியிடுவதில் மேலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட செய்திகள் பொய்யான வையா, இல்லையா என்பதை, பத்திரிகை தகவல் மையம் தீர்மானிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் குவிவதும் மோடிக்கு ஊதுகுழலாவதும்
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு மேலும் பெரிய அள விலான அச்சுறுத்தல் என்பது, உலகப் பத்திரிகைச் சுதந்திர அட்டவணை சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஊடக உரிமையாளர்கள் என்பவர்கள் ஒருசில கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் குவிவது அதிக ரித்துக்கொண்டிருப்பதாகும். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல ஊடக நிறுவனங்கள், மோடி ஆட்சிக்கு வாலாட்டும் ஊடகங்களாகவே (Godi - lapdog media) இருப்பதைப் பார்த்து வருகிறோம். இத்தகைய கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமான இந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மோடி அரசாங்கத்தின் ஊதுகுழல்களாகவே மாறி, இந்துத் துவா அரசியலைக் கடுமையாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வாலாட்டாமல் சுதந்தி ரமாக செய்திகள் வெளியிட்டால் அந்த ஊடகங்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன மற்றும் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப் படுகின்றன. அல்லது அதானி போன்ற மோடியின் கூட்டுக்களவாணி முதலாளிகளால் என்டிடிவி எடுத்துக் கொள்ளப்பட்டதுபோல், எடுத்துக்கொள்ளப் படுகின்றன. விளைவு, சுதந்திரமான இதழியலுக்கான இடமும், ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடிய புலனாய்வு இதழியலும் சுருங்கிக்கொண்டே இருக்கின்றன.
ஜனநாயகத்தின் மீதான ஒட்டு மொத்த தாக்குதலின் ஒரு பகுதி
பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படு வது, எதேச்சதிகார மோடி அரசாங்கத்தினால் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலின் ஒரு பகுதியேயாகும். எந்த செய்தி வெளியிட வேண்டும், அது எப்படிச் சித்த ரிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பிரதான ஊடகங்க ளுக்குக் கட்டளை பிறப்பித்திடும் அளவிற்கு நிலைமை கள் மாறி இருக்கின்றன. இதில் மிகவும் உச்சபட்ச முரண்தகை (supreme irony) என்னவென்றால், பத்திரிகை சுதந்திரத்தின் மீது மிகவும் தாக்குதலைத் தொடுத்துள்ள உள்துறை அமைச்சகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர், அமித் ஷா, உலகப் பத்திரிகை தினத்தன்று, இந்தியாவில் ஜனநாயகம் செழித்தோங்குவதற்கு உதவிடும் விதத்தில் பத்திரிகையாளர்கள் முக்கியமான பங்கினை ஆற்றிவருவதற்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருப்பதாகும். இந்தியாவில் இதழியல் துறை மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள இந்த இருண்ட காலத்திலும், ஆட்சியாளர்களின் அனைத்துவிதமான மிரட்டல்களை யும் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, தைரியத்துட னும், துணிவுடனும், நேர்மையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து விதமான ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் உரித்தாக் கிக் கொள்கிறோம். பத்திரிகைச் சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது, ஜனநாயகத்தினைப் பாதுகாப்ப தற்கான ஒட்டுமொத்தமான போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.
மே 9, 2023, தமிழில்: ச.வீரமணி