மாமேதை கார்ல் மார்க்ஸ் இந்த வகையான தொழில்கள் - குறைந்த கூலி, பீஸ் ரேட் போன்றவை முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான கூலி முறை என்று விவரித்தார். ஏனெனில் இது தொழிலாளர்கள் வேலை செய்வதில் அதிக நேரத்தையும் உழைப்பையும் “இயல்பாகவே” செலவிட ஊக்குவிக்கிறது. இது தொழிலாளர்களின் வேலை நாட்களை தானாக முன்வந்து நீட்டிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.
நவீன தாராளமய கொள்கைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு கட்டமாக பல்வேறு சேவைகள் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டு அந்தத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டற்ற சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். உலக மயம், தாராளமயம், சந்தைப்படுத்துதல் என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் அமலாக்கப்பபட்டு ‘நவீனம்’ என்ற பெயரில் புதிய புதிய உழைப்புச் சுரண்டல் முறைகள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெரு முதலாளிகளுக்கு ‘லாபம்’ என்பதைத் தொடர்ந்து மிக நெருக்கமான பிடித்தமான சொல் ‘நவீன தொழிற்நுட்பம்’ ஆகும். இந்த நவீன தொழிற்நுட்ப வளர்ச்சியில் புதிய புதிய வேலை முறைகள் அமல்படுத்தப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் டிஜிட்டல் தொழில் மற்றும் டிஜிட்டல் பொருளா தாரம் என்பதாகும். அதன் ஒரு பகுதி தான் ‘கிக் பொருளாதாரம்’ (GIG ECONOMY).
கிக் பொருளாதாரம் என்றால் என்ன?
கிக் பொருளாதாரம் என்பது தொழிலாளர்களின் உழைப்பை முற்றிலும் மலிவாக சந்தைப்படுத்து வதாகும். இது முழுநேர நிரந்தர ஊழியர்களை நிரா கரித்து, சுயேட்சையான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் முற்றிலும் நிரந்தரமற்ற அத்தக்கூலி வேலையாட்கள், தற்காலிக மற்றும் பகுதிநேர ஊழியர்களை பெரிதும் ஈடுபடுத்துவதாகும். கிக் பொருளாதாரம் சந்தேகத்திற்கு இடமின்றி பணி கலாச்சார மாற்றத் திற்கு வழி வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான வழக்கமான தொழிலாளர் -முதலாளி உறவு முறை யை மீறுகிறது அல்லது இல்லாமல் போகிறது. கிக் பொருளாதாரம் என்ற பெயரில் அணித்திரட்டப் பட்ட தொழிலாளர்கள் செய்யும் வேலை நேர உழைப்பின் அளவை விட அதிகமாக உறிஞ்சப்படு கிறது. உலகில் நிலவும் போட்டித் தன்மை, வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை அதிகமாக்கி வருகிறது முதலாளித்துவம். இது முற்றிலும் நிச்சயமற்ற, நிர்ணயமற்ற கூலி முறை என்பதே ஆகும். கிக் பொருளாதார நிறுவனங்களின் முதன்மை யான கண்டுபிடிப்பு, செயலி(ஆப்)-அடிப்படையிலான இடைமுகம், 2010 இல் வாடகை டாக்சி ஓட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் உணவு, மளிகை மற்றும் பிற பொருட்கள் கொண்டு செல்லும் முறை உருவாக்கப்பட்டு அது கோவிட் காலத்தில் முதன்மை பெற்றது.
இத் துறையில் தொழிலாளர்கள் மிக உயர்ந்த அளவிலான சுயேட்சைத் தன்மை, சுதந்திரம் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் தங்கள் முதலாளிகளின் கைப்பிடியில் தான் உள்ளனர். குறிப்பாக, வேலை நேரத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு நிறுவனம் அளிக்கிறது; அதே நேரத்தில் ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட டெலிtரிகளை முடித்திருக்க வேண்டும்; அவ்வாறு முடித்தால் தான் அடுத்த நாளுக்கு தொழிலாளர்களின் ஆப் செயல்படும். ஆப் செயல்பட்டால் தான் தொழி லாளர்கள் தங்களது வருகையை பதிவு செய்து அடுத்து, நிறுவனம் தரும் வேலைகளை செய்ய முடியும். இந்தியாவில் அந்த வகையில் உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் பணியை டிஜிட்டல் ஆப் மூலமாக பல்வேறு ஏக போக நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர் குறிப்பாக ஸ்விகி, ஜமோட்டோ, ஒலா, உபர் இட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 77 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தொழி லில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் இந்த பணியினை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை யின் காரணமாக படித்த இளைஞர்கள் பாதுகாப்பற்ற இந்த துறையில் தங்களை ஈடுபடுத்திகொள்கின்றனர். கிக் தொழில் முறையில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவு என்பது முழுமையாக செயலி முலமாகத்தான்; அது வேலைக்கான ஆணை யாக இருந்தாலும், விநியோகிக்கும் பணிகளாக இருந்தாலும் அல்லது மற்ற குறைகள் கூற வேண்டு மென்றாலும் ஆப் மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும். முதலாளி இயக்குவார்; ஆனால் அவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். இது உண்மையான சுயதொழில் அல்லது சுயேட்சையான ஒப்பந்ததாரர் என்பது போன்றதல்ல. கிக் துறையில் புதியதாக பணிகளை அறிமுகப்படுத்தும் போது சந்தை பெரியதாக இருந்தது. குறைந்த அளவிலேயே வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு ஓரளவு கணிச மான ஊதியம் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப் பட்டது. நாளடைவில் இத்துறையில் புதிய ஊழியர்கள் நுழையும் போது போட்டி கடுமையாகிறது; ஊழி யர்கள் வேலையில்லாமல் ஆங்காங்கே வீதிகளில் நேரம் கழித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ஊதியம் குறைகிறது. ஆனால் முதலாளிகளின் லாபம் மட்டும் குறைவதில்லை. தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு முதலாளிகள் சொல்வதை- குறிப்பாக அதிக நேர வேலை, அதிக வாடிக்கையாளர்களை சந்திப்பது போன்ற நிர்பந்த த்திற்கு ஆளாகின்றனர். வேலையில் மற்றும் சேவைகளில் ஏற்படும் இடையூறுகள் குறை பாடுகள் அனைத்தும் முழுமையாக ஊழியர்களை சார்ந்தது; அவர்களே சுயமாக எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அனைத்திற்கும் ஊழியர்களே பொறுப்பாக்கப்படுகின்றனர்.
காரல் மார்க்ஸ் கூற்று
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மாமேதை கார்ல் மார்க்ஸ் இந்த வகையான தொழில்கள் - குறைந்த கூலி, பீஸ் ரேட் போன்றவை முதலாளி களுக்கு மிகவும் சாதகமான கூலி முறை என்று விவரித்தார். ஏனெனில் இது தொழிலாளர்கள் வேலை செய்வதில் அதிக நேரத்தையும் உழைப்பையும் “இயல்பாகவே” செலவிட ஊக்குவிக்கிறது. இது தொழிலாளர்களின் வேலை நாட்களை தானாக முன்வந்து நீட்டிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது, ஏனெனில் இது அவர்களின் தினசரி அல்லது வாராந்திர ஊதியத்தை அதிகரிக்கும். இருப்பினும், தொழிலாளர்களின் அதிகரித்த உற்பத்தியைப் பூர்த்தி செய்ய முதலாளிகள் ஊதியத்தை சரிசெய்ய வேண்டிய அதாவது, அதிகரிக்க வேண்டிய அவசிய மில்லை. “பீஸ் ரேட் வேலை தனிநபர் ஊதியத்தை சராசரிக்கு மேல் உயர்த்தும் அதே வேளையில், இந்த சராசரியைக் குறைக்கும் போக்கையும் கொண்டுள்ளது” என்று மார்க்ஸ் எழுதினார். அவரது கூற்றுப்படித் தான் இன்று உலகப் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. அந்த கூற்று உண்மை என்று தற்போதயை பொருளாதார மற்றும் தொழிலாளர்களின் நிலைகள் நிரூபிக்கின்றன.
குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற தன்மை மற்றும் அதன் அரசியல்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூற்றுப்படி, ஊதியத்தில் முறைகேடு மற்றும் சாதகமற்ற வேலை நிலைமைகள் உள்ளன. உலகள வில் பெரும்பாலான இணைய வழி சேவை மற்றும் கிக் தொழிலாளர்கள் குறிப்பிட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே பெறுகின்ற னர். தொழிலாளர்கள் தங்களது சுகாதார பராமரிப்பு க்கு செலவிட இயலாத நிலை, நீண்ட நேரம் வேலை செய்தல் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாத நிலை, வேலையின் காரணமாக தொடர்ச்சியான மன அழுத்தம் என சொல்லொண்ணா பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவர்களுக்கு ‘தொழிலாளர்’ என்ற அந்தஸ்து தரவேண்டும் என்று ஐஎல்ஒ கூறுகிறது. ஐஎல்ஓவின் 2019ல் எதிர்கால வேலைக்கான உலகளாவிய ஆணையம், டிஜிட்டல் தொழிலாளர் களுக்கு சில குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் பாது காப்புகளை உறுதி செய்திட தேவைப்படும் சர்வதேச நிர்வாக அமைப்பை உருவாக்கிட வேண்டும். சமூக பாதுகாப்பு தேவைகளுக்கான குறைந்தபட்ச நிதி உள்கட்டமைப்பை மேம்படுத்திட வேண்டும். தொழி லாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்படும் தகராறு களை தீர்க்க பிரதிநிதி குழு அமைத்திட வேண்டும்” என அனைத்து நாடுகளுக்கும் பரிந்துரைத்துள்ளது. லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின்படி ஐரோப்பா மட்டுமல்ல; உலகளவில் இந்த பணி ஆபத்தானதாக உள்ளது; காப்பீடு பாதுகாப்பின்மை, உடல் நலன் கேடுகள், குறைந்த அளவிலான ஊதியம், பணிநீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பின்மை, தொழிலாளர்களின் தகுதிக்கேற்ப வேலையில்லாமை, கூட்டுபேரத்திற்கு தொழிற்சங்கம் அமைக்க இயலாமை ஆகியவற்றால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது.
அரசு, பொதுத்துறை அல்லது தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெறும் சலுகைகள் சட்டப் பலன்கள் போன்று இவர்களுக்கு மருத்துவ வசதி, நீடித்த தொடர்ச்சியான பணி, நிதி பாதுகாப்பு வேலை உத்தரவாதம் போன்ற மற்ற அடிப்படை சட்ட பலன்கள் கிடையாது அல்லது வழங்கப்படுவதில்லை. இந்திய அரசு இவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் அப்ரபன் கம்பெனி, ஓலா, உபர், ஸ்விக்கி, டுன்ஒ பிளிப்கார்ட், சேடோ பாக்ஸ் போன்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது என்றும் இந்தியாவின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறுகிறார். ஆனால் இந்த நிறுவனங்கள் இவர்களை ‘டெலிவரி பார்ட்னர்ஸ்’ என்றும் வகைப்படுத்தி தொழிலாளர் சட்ட உரிமைகள் மற்றும் சமூகப்பாதுகாப்பு பலன்களை மறுக்கிறது.
கிளர்ந்து எழும் கோரிக்கைகள்
சமீப காலங்களில் இந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக தன்னெழுச்ச்சியான போராட்டங்களை வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களின் இந்திய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் முழுமை யாக அமல்படுத்த வேண்டும்; வேலையாணை, அடையாள அட்டை வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கிட வேண்டும்; சமூக பாதுகாப்பு பலன்களான பிஎப், இஎஸ்ஐ, பணிக்கொடை, வார விடுமுறை வேண்டும் என பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே பெற்று கொண்டிருந்த ஊதியத்தை வெட்டக்கூடாது; ஆப்பில் வாடிக்கையாளர்கள் வழங்கக்கூடிய ரேட்டிங் முறைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும்; முக்கியமாக பணிநேரங்களில் ஏதாவது விபத்து மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை முறையிட மாவட்டங்களில் நிறுவன அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தங்களது போராட்டங்களை துவக்கி உள்ளனர்.
இந்திய அரசு இந்த ஊழியர்களை தொழி லாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் இந்த துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்று நிதி அயோக் தெரி விக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையில் இவர்களுக் கான பாதுகாப்பு, சட்ட உரிமைகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவது இந்திய அரசின் கடமையாகும். பாதுகாப்பற்ற வேலைச் சூழல், பெரும் சுரண்டலுக்கு ஆட்பட்டு பணிபுரியும் இந்த தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை தீர்த்திட தமிழக தொழிலாளர் துறை நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். சமீபத்தில் மும்பை தானே நுகர்வு நீதிமன்றம் ஒலா நிறுவன வழக்கில் ஒலா நிறுவனம் சேவையில் குறை ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் தான் முழு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தனது ஊழியர் மீது அந்த பொறுப்பை தள்ளக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கருத்தில் கொண்டு அரசு இவர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இவர்களுக்கான சட்டப் பலன்கள் அனைத்து வழங்கிட வேண்டும். அதற்கான போராட்டத்தை சிஐடியு முன்னெடுக்கும்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்.