articles

img

என்றைக்கும் அணையா ‘ஜோதி’ பாசு - ந. ராஜா

1943 ஆம் ஆண்டு வங்காளம் மிகக் கொடிய பஞ்சத்தை கண்டது. பல லட்சம் மக்கள்  உயிரிழந்த னர். கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் நிதி திரட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது. நூற்றுக்கணக்கான கஞ்சித் தொட்டிகளை தொடங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது .இச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியினால் மருத்துவ உதவி  குழு உருவாக்கப்பட்டது. இதற்கு டாக்டர் பி.சி. ராய் தலை வராகவும் ஜோதிபாசு செயலாளராகவும் இருந்தார். 1944ஆம் ஆண்டில் கட்சி ஜோதிபாசு வை பி என் ரயில்வே தொழிலாளர் மத்தியில் வேலை செய்து தொழிற்சங்கத்தை உருவாக்கும்படி கூறியது. ஜோதி பாசு இந்த ரயில்வே தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதற்காக மிகக் கடுமையாகப் பாடுபட்டார். அவர் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் மிக நெருக்கமாக பழகினார்.  ஓராண்டு காலத்திற்குள் பிஎன் தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு பலமான அடித்தளம் இட்டார். 1945 ஆம் ஆண்டில் ஜோதிபாசு கட்சியின் மாநிலக்குழுவில் இணைக்கப்பட்டு அதன் அமைப்பாளர்களில் ஒருவரானார்.

1946 ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்ற தேர்தலில்  கம்யூனிஸ்ட் கட்சி 20 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஜோதிபாசு ரயில்வே தொழிலாளர்கள் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றார். இந்திய நாட்டின் வரலாற்றில் முதன்முறை யாக கம்யூனிஸ்டுகள் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் அன்றைய காங்கிரஸ் கட்சி ரவுடித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது. பல இடங்களில் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக அடக்கப் பட்டனர். அந்த விஷயத்தை ஜோதிபாசு நினைவுபடுத்து கிறார் “ஒரு வேட்பாளர் என்ற முறையில் என்னுடைய முதல் தேர்தலானது ஒரு முதலாளித்துவ தேர்தல் என்பது எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. அது நெருப்பில் எழுந்த ஞானஸ்தானம் ஆக இருந்தது. இந்த தேர்தலானது ஒரு படிப்பினையாக இருந்தது. நம்முடைய வர்க்க எதிரிகள் பகிரங்கமாக அல்லது மறைமுகமாக எந்த வழியையும் கடைபிடிப்பார்கள்” என்பதை நாங்கள் உணர்ந்தோம். 1946ஆம் ஆண்டு தேர்தலானது எனக்கு ஒரு விஷயத்தை போதித்தது. அதாவது இந்த “முதலாளித்துவ அமைப்பில் இலட்சியத்திற்கும் நேர்மைக்கும் இடம் கிடையாது என்பதே அது. அதன் நோக்கம் முழுவதும் எவ்வாறா யினும் வெற்றி பெறுவதே என்பதை அது எனக்கு உணர்த்தியது” ஜோதிபாசுவின் முதல் தேர்தல் பார்வையானது இன்றைக்கும் ஒன்றிய அரசாங்கத் திற்கும் மேற்கு வங்கத்தில் ஆளுகின்ற திரிணாமுல் காங்கிரசுக்கும்  பொருந்தக் கூடியதாகவே உள்ளது. 

1946  ஆம் ஆண்டில் பயங்கரமான மதக்கலவரம் மூண்டது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். இதுகுறித்து ஜோதிபாசு கூறுகையில், நமது கட்சி நாட்டின் பிரிவினையை தீவிரமாக எதிர்த்தது. நமது  செல்வாக்கு ஒரு அளவிற்கு மட்டுமே இருந்த போதிலும் அதைக்கொண்டு தீவிரமாக எதிர்த்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்பதில் அது உறுதியாக இருந்தது.

போராடும் மக்களுக்கு ஆதரவாக...

1952 முதல் 1962 வரையிலான காலத்தில்  ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகள் ,அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்ட வீச்சுகளை கண்டது. அனைத்துப் போராட்டங்களிலும் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்க ளைத் திரட்டுவதில் ஜோதிபாசு முக்கிய பங்கு வகித்தார். 1960-களில் நாடெங்கும் தலைவிரித்தாடிய அரிசிப் பஞ்சம் வங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இடது முன்னணி வீதிகளில் இறங்கி போராடி யது. தோழர் ஜோதிபாசு உட்பட பல தலைவர்களும் பல்லாயிரம் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.  1969 இல் ஐக்கிய முன்னணி பெருவெற்றி பெற்றது. அஜய் முகர்ஜி முதல்வராகவும் ஜோதிபாசு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.1971 இல் ஜோதி பாசுவுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை இருந்தும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க மறுத்தார். 1972இல் நடைபெற்ற தேர்தலில் கடுமையான அடக்கு முறை மற்றும் மோசடியான தேர்தலை நடத்தியது காங்கிரஸ். இதனால் கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோதிபாசு அறிவித்தார். “1972 முதல் 1977 வரை 1500 மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.பல்லாயிரம் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளிமாநிலங்களுக்கு விரட்டப்பட்டனர் .அரை பாசிச ஆட்சி நடந்தது. இதை எதிர்த்த போராட்டத்தில் புடம் போட்டு வார்க்கப்பட்டதுதான் இடது முன்னணி. 1977இல் உலகமே வியக்கும் வண்ணம் அடக்குமுறை களை முறியடித்து இடது முன்னணி பெற்றது சாதாரண வெற்றியல்ல. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றது.

நிலச்சீர்திருத்த சாதனை

1946 முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற  ஜோதிபாசு 24 ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முதல்வராய் ஜொலித்தார்.  தம் ஆட்சிக்காலத்திலேயே புத்ததேவ் பட்டாச் சார்யாவை முதல்வராக்கி தான் சட்டமன்ற உறுப்பின ராக தொடர்ந்து, வேறு எங்கும் நிகழாத அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்.  இந்தியாவின் ஜீவன் கிராமங்கள், இந்தியாவின் ஆத்மா கிராமங்கள், இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று விடுதலைப் போரில் மகாத்மா காந்தி யும் ஜவஹர்லால் நேருவும் கூறியதை பேசாத கட்சிகளே இல்லை; தலைவர்கள் இல்லை. ஆனால் கிராமப்புறங் களை தலைநிமிர வைத்தது தான் மேற்கு வங்கத்தின் தலையாய சாதனை. கிராமப்புற வளர்ச்சி,  நிலச்சீர்திருத்தம் 1977 முதல் இடது முன்னணியின் முதன்மை இலக்காக இருந்தது .

நிலச்சீர்திருத்தம், உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் என்கிற இரண்டும் கிராமப்புற வளர்ச்சி என்கிற கோபுரத்தின் அடித்தளம் எனில் மிகையல்ல. 73. 66 லட்சம் ஹெக்டேர். இதில் 18 விழுக்காடு அதாவது 13.81 லட்சம் ஹெக்டேர் நிலம் மேற்குவங்கத்தில் மட்டும் கையகப்படுத்தப் பட்டது. இதில் 10. 63 லட்சம் ஹெக்டேர் நிலம் ஏழை  விவசாயிகளுக்கு தரப்பட்டது. 26 லட்சத்து 46 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்தனர் .இதில் 9.72 லட்சம் பேர் தலித்துகள். 5.11 லட்சம் பேர் பழங்குடி யினர் என்பது ஜோதிபாசு ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனையாகும். உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சீராக 6 விழுக்காடு வளர்ச்சியை கண்டு வந்தது. ஜோதிபாசு காலத்தில் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட 17 பெரிய மாநிலங்களில் மேற்கு வங்கம் உணவு உற்பத்தியில் முதலிடம் வகித்தது. ஒன்பதா வது ஐந்தாண்டு திட்டம் இட ஒதுக்கீடு பற்றிய பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் தனது அறிக்கை யில் மேற்குவங்க நிலச் சீர்திருத்தத்தை சுட்டிக்காட்டி பாராட்டியதோடு அதுவே சரியான அணுகுமுறை எனவும் கோடிட்டுக் காட்டியது.  நிலச்சீர்திருத்தம், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி யாக  திகழ்ந்தது. மேற்கு வங்கத்தில் 5.55 லட்சம் பெண் களுக்கு தனி பட்டா வழங்கியது. கணவன், மனைவி பெயரில் கூட்டுப்பட்டா வழங்கியும் இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழ்ந்தது.

பஞ்சாயத்து ராஜ்யம்

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்யம்  பற்றி பேசுவதற்கு வெகு காலம் முன்பு உள்ளாட்சி அமைப்பு களுக்கான 73 மற்றும் 74-வது அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் 17 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாயத்துகளுக்கு உரிய இடத்தை அளித்து முன்னோடியாக முன்மாதிரியாக ஜோதிபாசு தலைமை யிலான மேற்கு வங்க அரசு 1978 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஐந்து முறை தேர்தலை நடத்திய பெருமை உண்டு. 18 வயதில் வாக்குரிமை என்பதை முதன்முதலில் பஞ்சாயத்து தேர்தலில் அமலாக்கி வரலாற்றில் முத்திரை  பதித்தது.  கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட  ஊராட்சி என்கிற மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை மேற்குவங்கத்தில் 1978 முதல் வெற்றிகரமாக செயல்படுத்தினார் ஜோதிபாசு. 

சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை பாதுகாப்பதில் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இடது முன்னணி ஆட்சியில் மதச்சார்பற்ற ஜனநாயக செயல்பாடுகளில் முன்னேற் றம் காண்பது என்பது சிறுபான்மை இனத்தவர்களுக்கு குறிப்பாக மாநில மக்கள் தொகையில் 24 விழுக்காடாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சமமான வாய்ப்பை அளித்துள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயி கள் நலம், தொழிலாளர்கள் நலம், தலித்துகளும் பழங்குடிகளும் பெண்கள், சிறுபான்மையினர் நலமென அனைத்து வகையான துறைகளிலும் ஒவ்வொன்றாய் திட்டமிட்டு முன்னேற்றம் காணு வதில் ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை

மக்கள் ஒற்றுமை

நாடெங்கும் தலித் மற்றும் பழங்குடிகள் மீது கொடும் தாக்குதல்கள் நிகழும்போது,ஜோதிபாசுவின் ஆட்சி யில் மேற்குவங்கம் விதிவிலக்காக அவர்களின் பாது காப்பு அரணாக வளர்ச்சிக்கு ஏணியாக இருந்தது என மண்டல் கமிஷன் அறிக்கை பாராட்டியுள்ளது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நாடெங்கும் சீக்கியர்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். மேற்குவங்க இடதுமுன்னணி அரசு  தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்சி ஊழி யர்களும் சீக்கியர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து பாதுகாத்தனர். அயோத்தி ரத யாத்திரையால் நாடு ரணகளம் ஆனது. சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கம் சிறுபான்மையினரை பாதுகாத்து என ஜோதி பாசு மேற்குவங்கத்தில் முதலமைச்சராக இருந்த போது செய்த சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்திய மக்களின் நெஞ்சங்களில் இடதுசாரி இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக என்றென்றும் ஜோதி பாசு அணையா “ஜோதி” யாக வாழ்கிறார்.

கட்டுரையாளர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்.