articles

img

தொழிற்சங்க தந்தை சக்கரைச் செட்டியார் - ஏ.பாலு

பஞ்ச கச்சமாகக் கட்டிய வேஷ்டி      கழுத்துவரை பொத்தானிடப்பட்ட கதர் கோட் தலையில் தொப்பி, மடித்த கதர் அங்கவஸ்திரம் தேய்ந்த செருப்பு கையிலொரு குடை

இவ்வளவு வர்ணனைக்குட்பட்ட ஒரு பெரியவர் உயர்நீதிமன்ற வளாகமருகே பேருந்திலிருந்து இறங்கு கிறார். தம்பு செட்டி தெருவுக்கு நுழையுமிடத்தில் உள்ள  சர்ச்சுக்குள் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து பிராட்வேயில் உள்ள சென்னை மாகாண தொழிற்சங்க காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து தன் பணிகளைத் துவக்குகிறார். அவர்தான் வி.சக்கரைச் செட்டியார். அவர் ஏஐடியுசி என்றழைக்கப்படும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைவருமாவார். 1880ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த சக்கரை செட்டியார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ.பட்டமும், அதன் பின் சட்டக் கல்லூரியில் பி.எல்.  பட்டமும் பெற்று தனது 22வது வயதில் வழக்கறிஞர் ஆனார். திலகர், லஜபதிராய் போன்ற காங்கிரஸ் தலை வர்களின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட அவர் இரண்டாண்டு காலத்திற்கு பிறகு வழக்கறிஞர் தொழி லைக் கைவிட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்திலே குதித்தார். வஉசி, பாரதியார், துரைச்சாமி அய்யர், திரு.வி.க. போன்றோருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்நியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் வகை யில் சுதேசி வஸ்து பிரச்சார சங்கத்தை பாரதியாரோடு சேர்ந்து உருவாக்கினார். 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பாரதியார், வஉசி  போன்றோருடன் சேர்ந்து திலகருக்கு ஆதரவாகப் போராடினர். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் உருவாக்கிய “ஹோம்ரூல் லீகில்” சேர்ந்து செயல்பட்டார்.

1917ம் ஆண்டில் சென்னை மாகாண சங்கம் உருவாக்கப்பட்டது. சக்கரை செட்டியார் அந்த சங்கத்தின் அமைச்சர்களுள் ஒருவராக செயல்பட்டார். ஆங்கிலேய ஆதரவு கட்சியான நீதிக்கட்சிக்கு இதைக்  கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. “பார்ப்பன அடிமைகளின் சங்கம்” என இதை வர்ணித்தது. சென்னை மாகாண சங்கமானது “தமிழர்கள் தமிழ்மொழியிலே பேச வேண்டும்” என்று வலியுறுத்தியது. நீதிக்கட்சியின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பக்தியை அம்பலப்படுத்தியது. சங்கத்தின் முடிவுப்படி சக்கரை செட்டியார் பொதுக்கூட்டங்களிலும், மாநாடு களிலும் தமிழிலேயே பேசத் தொடங்கினார். 1918ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டாக்டர். வாடியா, திரு.வி.க. ஆகியோருடன் சேர்ந்து சென்னை தொழி லாளர் சங்கத்தை உருவாக்குவதில் சக்கரை செட்டியார் முன்னின்றார். அதைத் தொடர்ந்து சென்னை யில் எண்ணற்ற தொழிற்சங்கங்கள் தோன்றின. இதில்  சக்கரை செட்டியாருக்கு பெரும்பங்கு உண்டு. இதன்  காரணமாக பல சங்கங்களுக்கு அவர் தலைவரானார். இந்த கட்டத்திலிருந்து அவருடைய லட்சியமானது சுதந்திர இயக்கம், தொழிலாளர் இயக்கம் என்ற இரு இணைப்பாக பெருக்கெடுத்தோடத் தொடங்கியது.

பாரதியை தூக்கி சுமந்த  சக்கரை செட்டியார்

பாரதியார் இறந்த அன்று அவர் உடலை சுடுகாட்டிற்கு  தூக்கிச் சென்று எரியூட்டிய பத்து நபர்களில் சக்கரை செட்டியாரும் ஒருவர். அந்த 10 பேர் கொண்ட இரங்கல் கூட்டத்தில் பாரதியாருக்கு அஞ்சலி செய்து சக்கரை செட்டியார் தமிழில் பேசினார். தொழிற்சங்கங்கள் அமைப்பதால் பல தொல்லைகள் ஏற்படும். சங்கம் அமைப்பது அநாவசியம்  என்று நீதிக்கட்சியின் தலைவர்களும் வேறு சில தலைவர்களும் பேசிய பொழுது, அதை சக்கரை செட்டி யார் வன்மையாக மறுத்து “தேசபக்தன்” பத்திரிக்கை யில் எழுதினார். 1921ம் ஆண்டு மே மாதத்தில் கர்னாடிக் மில்லில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இது 6 மாத காலம் நீடித்தது. இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேய கவர்னர் வெல்லிங்டன் என்பவன் திரு. வி.க.வையும் சக்கரை செட்டியாரையும் அழைத்து நாடு கடத்துவேன் என்று பயமுறுத்தி பார்த்தான். வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க முடியாது. நீ செய்வதை செய்து கொள் என்று கூறிவிட்டு சக்கரை செட்டியாரும் திரு.வி.க-வும் திரும்பிவிட்டனர். அந்த வேலை நிறுத்தத்தின் பொழுது மட்டும் இரு தடவை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 9 பேர் கொல்லப்பட்டனர்.

உடல்நிலை காரணமாக திரு. வி. க. சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து விலகிய பின், சக்கரை செட்டியார் அதன் தலைவராக ஆனார். அதேபோல், தொழிலாளர் மத்திய சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நலன், தொழிலாளர் உயர்வு, தொழிலாளர் மேம்பாடு என்ற சிந்தனையோட்டத்தைக் கொண்டிருந்த சக்கரை செட்டியார், கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தார். அவர்  ஒரு போதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த தில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியோடும், கட்சித்  தலைவர்களுடனும் இணை பிரியாமல் சேர்ந்தே பாடு பட்டார்! அவர்களுடைய லட்சியம்தான் தொழிலாளர் களை உய்விக்கும் என்ற தீர்க்கமான முடிவை அவர் கொண்டிருந்தார். இந்திய தொழிலாளர் நிலை குறித்து விசாரிக்க “விட்லி கமிஷன்” வந்த பொழுது மிதவாத தொழிற்சங்கத் தலைவர்கள் அதை வரவேற்றனர். ஆனால் “இது பய னற்ற வீண் வேலை” என்று கூறி சக்கரை செட்டியார் அந்தக் கமிஷனைப் புறக்கணித்தார்.

1941ஆம் ஆண்டில் சென்னை மேயராக சக்கரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டில் போக்கு வரத்துத் தொழிலாளிகளின் மாபெரும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராடும் தொழிலாளி களுக்கு ஆதரவாக நிதி வசூலிக்க சக்கரை தெருவில் இறங்கினார். 30 ஆயிரம் ரூபாய் வசூலித்துஉதவினார். 1942ஆம் ஆண்டில் பி அண்ட் சி மில்லில் மீண்டும் ஒரு போராட்டம் வெடித்தது. சக்கரை செட்டியார்,  சங்கத் தலைவர் என்ற முறையில் அதற்குத் தலைமை தாங்கி வழிகாட்டினார். கொடிய அடக்குமுறை ஏவி விடப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டனர். 1943ஆம் ஆண்டில் சென்னை மாகாண தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்ட பொழுது  சக்கரை செட்டியார் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். 1948ஆம் ஆண்டில் ஏஐடியுசியின் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1957ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.

1948-51 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கங்களும் அடக்குமுறைக்கு ஆளாகி யிருந்தபொழுது, சக்கரை தானே முன்னின்று தொழிற்சங்கப் பணிகளை நடத்தி வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்டிருந்த சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்டினார். 1952ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதர வில் தமிழக சட்டமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக் கப்பட்டார். 1956ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழிற்சங்க காங்கிரஸ் அவரது 76வது பிறந்த நாளை கோலாகல மாகக் கொண்டாடியது. டிசம்பர் 12ஆம் தேதி சென்னை கோகலே அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் ராஜாஜி, பக்தவத்சலம், பி.ராமமூர்த்தி, ஜீவா, ம.பொ.சி., எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சி.சுப்பிரமணியம் ஆகி யோர் சக்கரை செட்டியாரின் சிறப்பான பணியினை பாராட்டிப் பேசினர். இந்த விழாவிற்கு பிரபல தேசபக்தர் சேலம் வரதராஜுலு நாயுடு தலைமை தாங்கினார்.

தமிழக தொழிற்சங்கங்கள் உவந்து அளித்த 76 பவுன்களை, பி.ராமமூர்த்தி, ராஜாஜியிடம் கொடுக்க, அவர், அவற்றை பலத்த கர முழக்கத்திற்கிடையே சக்கரையிடம் அளித்தார். அதேபோல், ராமமூர்த்தி, பொன்னாடை எடுத்துக் கொடுக்க ராஜாஜி அதை வாங்கி சக்கரைக்குப் போர்த்தினார். அதன் பின் ராஜாஜி பேசினார்: “... சக்கரைச் செட்டியார், தொழிலாளர்களின் தலை வர் மட்டுமல்ல, தேசிய இயக்கத்தின் தலைவரு மாவார். தேசிய இயக்கத்திலும் அவர் தீவிரவாதி, காங்கிரஸ்காரர்கள் 1929ஆம் வருடத்தில் தான் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் கேட்டார்கள். சக்கரைச் செட்டியாரோ, 1906ஆம் வருடத்திலேயே 49 ஆண்டுகளுக்கு முன்ன ரேயே பூரண சுதந்திரம் வேண்டுமென்று கேட்டார். அத்தகைய தேசபக்தரைப் பாராட்டுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்”.

பாராட்டு உரைகளுக்கு நன்றி தெரிவித்து சக்கரைச் செட்டியார் பேசினார்.

சக்கரை செட்டியார் உடலைச் சுமந்த பி.ராமமூர்த்தி, ஜீவா

சிறிது காலம் உடல் நலம் குன்றியிருந்த சக்கரைச்  செட்டியார் 1958ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14ஆம் தேதி காலையில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி அடுத்த நாள் மதியம் கீழ்ப்பாக்கம் கல்லறையில் நடைபெற்றது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான தொழி லாளிகள் சோகமே உருவெடுத்தாற்போல் அணி வகுத்து வர அவரது உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய சவப்பெட்டியை பி.ராமமூர்த்தி, ஜீவா, கல்யாணசுந்தரம்,  ஏ.எஸ்.கே. போன்ற தலைவர்கள் சுமந்துசென்றனர். “சக்கரைச் செட்டியார் திருநாமம் வாழ்க”  என்று பி.ராமமூர்த்தி குரல் எழுப்ப, ஆயிரமாயிரம் தொழிலாளிகளும் அவ்வாறே செய்தனர். இந்த ஓசையின் பின்னணியில் தொழிற்சங்கத் தந்தை சக்கரைச் செட்டியாரின் புதைகுழி மூடப்பட்டது.

சக்கரை செட்டியார்  படிப்பகத்தின் வளர்ச்சி

சக்கரைச் செட்டியார் அவர்களின் மகத்தான பங்களிப்புக்கு மரியாதை செய்யும் வகையில், மதுரை மாநகர் வடக்கு 2ம் பகுதிக்குழுவிற்கு உட்பட்ட மீனாம்பாள்புரம் பகுதியில் பொன்மேனி பகுதியில் உள்ள வெற்றிலை விவசாயம் பார்த்த தோழர்கள் ஏ.வேலாயுதம், மாரியப்பன், பாண்டியன், ராமசாமி ரெட்டியார், ஏ.பெரியசாமி, ஆர்.ராக்கப்பன், கருப்பையா ஆகியோர் மதுரை மணி நகரம், பொன்னகரம், பூந்தோட்டம் பகுதியிலிருந்து 1957ஆம் ஆண்டு மீனாம்பாள்புரம் பகுதியில் குடியேறி அங்கு ஏற்கெனவே குடியிருந்து வரும் பழனி, குருசாமி, கே.அய்யாவு, எம்.குமாரசாமி, அழகுமலை, குண்டு கருப்பையா, சின்ன இளங்கான், சடையாண்டி, சேக்புரான், காதர் இப்ராஹீம், சுப்பிரமணியன், மாயாண்டி, வீராச்சாமி, சிவசாமி மற்றும் பல தோழர்களுடன் இணைந்து 28.2.57ஆம் ஆண்டு, சக்கரை செட்டியார் உயிரோடு இருக்கும்போதே இப்படிப்பகத்தை உருவாக்கினார்கள்.

65வருட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இப்படிப்பகம் இப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. ஏராளமான நலத்திட்டங்கள் செய்திருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 1993 வெள்ளப்பெருக்கின் காரணமாக செல்லூர், மீனாம்பாள்புரம் பகுதி மக்கள் தவித்த பொழுது வீடு  வீடாகச் சென்று உணவுக்குத் தேவையான பொருட்கள்  வாங்கி மக்கள் பசியைத் தீர்த்து வைத்தது. இப்படிப்பகம் அதுபோக கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு  பலவித மருந்துப் பொருட்களை வாங்கியும் கொடுத்தது. இதுபோக அரசு மருத்துவமனைக்கு தேவையான ரத்த நன்கொடை, பள்ளி மாணவ, மாணவி களுக்கு தேர்வு (ரிசல்ட்) அறியும் மார்க் லிஸ்ட் மற்றும் இளைஞர்களுக்கு தேவயைன சிலம்பு பயிற்சி, பல விளையாட்டுப் போட்டிகளை இப்படிப்பகம் மூலமே  செய்து கொண்டிருக்கிறோம். இவர் பிறந்த நாளான ஜுன் 14 அன்று மாணவ, மாணவிகளுக்கு கால்கு லேட்டர், பாடப்புத்தகங்கள், நோட் போன்றவைற்றை ஏழை, எளிய மாணவிகளுக்கு வழங்குவது கந்து வட்டியால் ஏழை, எளிய பாதிக்கப்பட்டபோது பல ஏழை எளியவர்களை காப்பாற்றியது போன்ற பல்வேறு  உதவிகளை இப்படிக்கத்தின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் வாலிபர் சங்க தோழர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அடக்குமுறை, மிசா போன்ற காலங்களில் நம் கட்சி தலைவர்களை பாதுகாப்பது, பாது காப்பிற்கான ஏற்பாடும் இப்படிப்பகம் செய்துள்ளது. 1980ம் ஆண்டு பூந்தோட்டத்தை சேர்ந்த முன்னாள் நகர் செயலாளர் பாலுத்தேவர் - நாகம்மாள் இவர்களின் மகன் கிருஷ்ணன் மூலமாக இளைஞர்களுக்கு கராத்தே பயிற்சி செய்து கொடுத்தது. இப்படிப்பகத்தில் பயின்ற இளைஞர்கள்  பாரதி கிருஷ்ணகுமார், ஜுனியர் விகடன் ஆசிரியர் சௌந்தர பாண்டியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1983 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 கிளை இருந்த இப்பகுதி இப்படிப்பகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு சேவை செய்ததை பார்த்த பல்வேறு இளைஞர்கள் வாலிபர் சங்கத்தில் இணைந்து இன்று இப்பகுதி பலம் பொருந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாலிபர் சங்கமும் பல்வேறு கிளைகளும் ஆதரவு பகுதியாகவும் உள்ளது. இனி மென்மேலும் சக்கரை செட்டியார் படிப்பகத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு  சேவை செய்து  இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  பெரும் கட்சியாக வளர்ப்போம் என உறுதியேற்கிறோம்.

கட்டுரையாளர் : சிபிஎம் மதுரை மாநகர் வடக்கு  இரண்டாம் பகுதி செயலாளர்