ஓர் இடதுசாரி அரசை அமைத்ததன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள் இலங்கை மக்கள்.
மக்கள் விடுதலை முன்னணி எனப் பொருள் படும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலை மையிலான தேசிய மக்கள் சக்தி முன்னணி பிரம் மாண்ட வெற்றியை ஈட்டியுள்ளது. அதன் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
நிர்வாக அதிகாரம் கொண்ட இந்த ஜனாதிபதி பதவியைக் கொண்டு இவர்கள் செய்யப் போவ தாக வாக்குறுதி அளித்துள்ள முதல் அம்சமே, ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரத்தைப் பறிப்பது தான்; அதற்கு மாறாக, அதிகாரம் மிக்க நாடாளு மன்ற ஜனநாயகத்தை அமலாக்குவோம் என்பது தான் இவர்களது முதல் வாக்குறுதி.
பதவி ஏற்பின் போது திஸாநாயக்க கூறி இருப்பது போல, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக் கையை முழுமையாக மீட்டெடுப்பதே முதல் பணி யாக இந்த அரசுக்கு இருக்க வேண்டும்.
அவர் மேலும்தமது உரையில், நம்பிக்கையி னாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக் கான கண்கள் நம்மை முன்னோக்கித் தள்ளுகின் றன என மிகத் துல்லியமாக இலங்கை மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமை தான் புதிய யுகத்திற்கான அடிக்கல்லாக அமையும்; அதன் மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டி எழுப்பப்படும் என்று திஸாநாயக்க முத்தாய்ப்பாக பேசியிருக்கிறார்.
உண்மையில் இதைச் செயல்படுத்துவதற்கு மிகக் கடுமையான சிரமங்களை புதிய இடதுசாரி அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென் றால் இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. 70 ஆண்டுகளுக் கும் மேலாக மாறி மாறி ஆண்டு வந்த இரண்டு முத லாளித்துவக் கட்சிகளும் இலங்கை மக்களின் வாழ்வியல் அடித்தளங்கள் அனைத்தையும் சீர ழித்துள்ளனர். நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கத்தின் விளைவாக தெற்கு ஆசியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் நில வுவது போலவே வறுமையும் துயரமும் வேலை யின்மைக் கொடுமையும் - இவற்றின் காரணமாக சமூகப் பதற்றங்களும் வலுவாக நிலவுகின்ற நாடு இலங்கை.
இத்தகைய சூழலில் சவால் மிக்க பொறுப்பினை ஏற்றுள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமை யிலான இடதுசாரி அரசு உள்நாட்டு அரசியலி லும் சர்வதேசிய அரசியலிலும் தனது நாட்டின் பொ ருளாதார நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு நுட்பமாகவும் சாதுரியமாகவும் காய்களை நகர்த்த வேண்டியது அவசியம் ஆகும்.
அதன் முதல் கட்டமாக உள்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரை யும் பரஸ்பரம் நம்பிக்கையூட்டி, சுயாட்சி அதிகாரம் உள்ளிட்ட - சிறுபான்மை மக்களின் உணர்வுக ளை - பூர்த்தி செய்ய வேண்டியது முதன்மைக் கட மையாகும். அதிலிருந்து திஸாநாயக்க அரசு தனது பணியை வெற்றிகரமாக துவங்கட்டும்.