articles

img

பலனளிக்காத ஆர்எஸ்எஸ் மீதான மூன்றாவது தடை உத்தரவு=கே. சந்துரு

1992 இல் பாபர் மசூதி தகர்ப்பும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும், மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், டிசம்பர் 10, 1992 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. இதற்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஆர்எஸ்எஸ் மீதான தடை உத்தரவை உறுதி செய்த பின்னரே இந்த  உத்தரவு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறி யது அலகாபாத் உயர்நீதிமன்றம். தீர்ப்பாயமோ ஆர்எஸ்எஸ் மீதான தடையை நியாயப்படுத்து வதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை என தீர்ப்பளித்தது.  

ஆயுதம் தாங்கிய பயிற்சி, ஊர்வலங்களுக்குத் தடை

இருப்பினும், ஆர்எஸ்எஸ் பற்றிய கவலைகளும், அச்சமும் நீங்கிடவில்லை. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா  ஆளுநர்கள் ஒன்றிய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

பொது ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 144 A  வில் புதிய சட்ட விதிகள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம்” எந்த வித மான ஊர்வலத்திலும் ஆயுதம் கொண்டு செல்லுதல், பெருந்திரள்  ஆயுதப் பயிற்சி (Mass Drills) செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கான அதி காரத்தை மாவட்ட குற்றவியல் நடுவர்/ மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

இதனுடன் கூடவே இந்திய தண்டனைச் சட்டத்தில்,  பிரிவு 153 AA வையும் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.   தெரிந்தே எந்த ஒரு ஆயுதம் தாங்கிய ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அல்லது ஏற்பாடு செய்வதை, பெருந்திரள் ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது, கலந்து கொள்வது  ஆகிய பிரிவும் சேர்க்கப்பட்டது. குற்றவியல் நடை முறைச் சட்டம் சட்டப் பிரிவு 144 AA இன் கீழ் பொது  இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை மீறினால், ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும்.

ஆயுதங்கள் எவை?

மேலும் ஆயுதங்கள் என்ற பதம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க மேற்படி இரண்டு  பிரிவுகளிலும் உரிய விளக்கங்கள் இணைக்கப் பட்டன. தாக்குதலுக்கோ அல்லது தற்காப்புக்கோ ஆன துப்பாக்கிகள்,  கூர்முனை ஆயுதங்கள், லத்திகள் மற்றும் கம்புகள் ஆகியவை ஆயுதங்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டன.

சிறுபான்மை அரசாக இருந்த பி. வி. நரசிம்மராவ் அரசு அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டிருந்தது. ஒருவேளை மக்களவை கலைக்கப்பட்டால் ஆயுதத்தடை செய்வதற்கான மசோதா காலாவதியாகிவிடக் கூடாது என்பதற்காகவே மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 1994 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மசோதா தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங்   ஆகியோர் ஆட்சிக் காலத்திலும் அந்த மசோதா சட்டமாகாமலே இருந்தது. பின்னர் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அது 1996 இல் தனது அறிக்கை யை சமர்ப்பித்தது.  ஆயுத அணி வகுப்பு நடத்து வதையும், ஆயுதப் பயிற்சி செய்வதையும் தடுப்பதற்கான  இம் மசோதா இறுதியாக பத்து ஆண்டுகள் கழித்து 2005இல் நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்குவந்தது.   

ஆர்எஸ்எஸ்சின் ஆயுதக்கலாச்சாரத்தை மறைமுகமாக  விமர்சி த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மசோதாவை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு   மசோதாவை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு ஏற்பட்ட நீண்ட கால தாமதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விமர்சித்தனர்.  பவன் குமார்  பன்சால் (சண்டிகர்) இந்த மசோதா” காலத்தின் தேவை” என்றார். “ சமீப ஆண்டுகளில் சிலர்  ஜனநாயகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு,  இந்நாட்டின் கலாச்சாரம், சமூக நெறிமுறைகள் அனைத்தையும் தாங்களே பிரதிநிதித்துவப்படுத்து வது போன்று செயல்படுகின்றனர். மக்களை  சட்டவிரோதச் செயல்களை செய்யத் தூண்டுதல், அச்சுறுத்தல், இனப்படுகொலைகளை நடத்தக்கூட எல்லா சாத்தியமான வழிகளையும் பயன்படுத்தி சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்” என்று பன்சால் கூறினார்.

எம்.ராமதாஸ் (புதுச்சேரி) “அணி வகுப்புகளில் ஆயுதங்களுடன் செல்வதை,  ஆயுதங்களுடன் பெரும் திரள் பயிற்சி நடத்துவதை இச்சட்டம் தடை செய்யும். வகுப்புவாத சக்திகள் நாட்டை அழிவை நோக்கி கொண்டு செல்வதை தடுப்பதற்கான சட்டம் இது” என்றார்.

விவாதத்தில், ஒன்றிய அமைச்சரவை சார்பாக  பேசிய சிவராஜ் பட்டீல் “ தோள்களில் லத்திகளை ஏந்திக் கொண்டு மக்களை அச்சுறுத்த முயற்சி  செய்தால், மாவட்ட ஆட்சியருக்கு அதைத் தடை  செய்வதற்கான விருப்புரிமை அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜூன் 23, 2005இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.

ஆர்எஸ்எஸ்-இன் ஆயுதக் கலாச்சாரத்தை தடை செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட  சட்டம் தூங்கிய விசித்திரம்

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இந்திய தண்டனைச் சட்டத்  தொகுப்பில் ஒரு பகுதியாக ஆயுதத் தடைச்சட்டம் இருந்தது. இருப்பினும் பெருந்திர ளாக ஆயுதங்களுடன் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூடப் பதிவு  செய்யப்படவில்லை. (அவ்வாறு பதிவு செய்யப் பட்டிருந்தால் ஆர்எஸ்எஸ்-இன் லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய ஷாகாக்கள் எப்படி இயல்பாக நடைபெற முடியும்-மொ-ர்)

ஆர்எஸ்எஸ் ஆண்டுதோறும் அதன் உறுப்பினர் களுக்கே உரிய தனித்துவமான வெள்ளைச்சட்டை காக்கி பேண்ட், தொப்பி, பெல்ட் அணிந்து கொண்டு இசைவாத்தியங்கள் முழங்க  லத்திகளுடன் அணிவகுப்பு நடத்துகிறது (மகாத்மாவின் பிறந்த நாளில் நடத்துவது தான் விசித்திரமானது)உரிய சட்ட விதிகளின் கீழ் மாவட்டக் குற்றவியல் நடுவர்/ மாவட்ட ஆட்சியர் ஊர்வ லங்களை, அணிவகுப்புகளை தடை செய்தால் உடனே ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிடுகிறது.

சட்டப்பிரிவுகள் 144 AA மற்றும் 153 AAஆகிய வற்றைப் புறக்கணித்து ஆர்எஸ்எஸ் முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடந்ததுண்டு.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் (1883),பிரிவு 41 A விலும் இதே போன்ற சட்டப்பிரிவுகள் உள்ளன. இப்பிரிவின்படி, காவல்துறை ஆணையாளர்,” பொது அமைதி, பொது ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிக்க  வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் எழுத்து மூலமாக ஆயுதங்களுடன் பயிற்சி நடத்துவது, அதில் பங்கேற்பது அல்லது எந்த ஒரு இடத்திலும் ஐந்து  பேருக்கு மேல் கூடுதல் அல்லது அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆயுதம் எடுத்துச் செல்லுதல் ஆகிய வற்றை எழுத்துப்பூர்வமாக தடை செய்யலாம்” என்று கூறுகிறது.

தெளிவான சட்டங்களை புறக்கணிக்கும்  சென்னை உயர்நீதிமன்றம்

இந்த விசயத்தில் தெளிவான அரசுச் சட்டம் இருந்தபோதிலும் கூட சென்னை உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் நீதிப் பேராணைகளை (ரிட் மனு) ஏற்றுக்கொண்டு லத்திகளைக் கொண்டு  செல்லக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு களுக்கு அனுமதி அளிக்கிறது.

இது போன்ற ஏற்பாடு 1998இல் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் ஜெயலலிதா அரசு ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டது. அதன்படி ஆர்எஸ்எஸ் அணி வகுப்பில் லத்தி, தடிகளை கொண்டு செல்லக்கூடாது என்று முடிவானது. இது போன்ற நிபந்தனை ஆர்எஸ்எஸ் இன் அணிவகுப்புச் சடங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது.

20 ஆண்டுகளாக சட்டத்தில் உள்ள பிரிவுகளை சத்தம் இல்லாமல் நீக்கிய அமித் ஷா

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு பயனுள்ள விவாதமும் நடத்தாமல்,பார் கவுன்சில் ,நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி இந்தி- சமஸ்கிருதப் பெயர்களுடன் மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2024 தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை கடந்த ஜூலை 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்தச் சட்டங்களின் பலனாக ஆர்எஸ்எஸ் தனது உறுப்பினர்கள் இனி லத்திகளுடன் அணிவகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா(BNSS) 2024 சட்டத்திலோ அல்லது பாரதிய நியாய சன்ஹிதா(BNS) சட்டத்திலோ சட்டப்பிரிவுகள் 144AA,153AA சேர்க்கப்படவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்காமல் இந்தச் சட்ட வழிவகைகளை வசதியாக மூன்று குற்றவியல் சட்டங்களில் (2023)சேர்க்காமல் விடப்பட்டுள்ளன.

காவல் துறையைச் சேர்ந்த அறிஞர் ஒருவர், மேற்படி இரண்டு சட்டப்பிரிவுகளையும் இப்போது நிறைவேற்றப்படும் குற்றவியல் சட்டங்களில் தக்க வைக்க வேண்டும் என்று கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரின் கேள்விக்கு பதிலாக அனுப்பப்பட்ட அரசுக் குறிப்பில், ஏன் அந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் நீக்கம் செய்யப்பட்டன என்று விளக்கம் இல்லை.இந்த மூன்று  குற்றவியல் சட்டங்களையும் அறிவிப்ப தற்கு அமித்ஷா ஏன் இவ்வளவு அவசரப்பட்டார் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது

நன்றி  : டைம்ஸ் ஆப் இந்தியா
- தமிழில்: ம.கதிரேசன்