tamilnadu

img

வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி
தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர்  மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (42).  இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் குறித்து மத பிரிவினைய ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிட்டாராம். இதுகுறித்து மீளவிட்டான்  கிராம நிர்வாக அதிகாரி பராசக்தி ,தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார் 

;