tamilnadu

ஆண்டாள் கோவிலில்  ஓ.பன்னீர்செல்வம்

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஞாயிறன்று வருகை தந்தார். அவரை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையாஉள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். வரவேற்பைஏற்றுக்கொண்ட அவர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆண்டாள் கோவில் யானை,ஆண்டாள் கோவில் குதிரைக்கு பழங்கள் கொடுத்தார். கோவில் கொடி மரத்தை தொட்டுவணங்கி விட்டு கோவிலுக்கு சென்றார்.

;