ட்விட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலாண்டுகள் லாபம் இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து, செலவைக் குறைக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து, முகநூலின் மெட்ட நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது.
இந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யும் பணியை இந்த வாரமே மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரிந்து வரும் நிலையில், எத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.