world

img

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உயிரிழப்பு 400-ஐ தாண்டியது

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 சிறார்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தொலைத் தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியது லெபனான் குற்றம்சாட்டியது.

இந்த வெடிவிபத்தில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3000 பேர் காயமடைந்தனர்.குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த முனைப்பு காட்டி வருகிறது. லெபனானில் உள்ள பால்பெக், ஹெர்மல், பிப்லோஸ் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.