ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெர்மன் நாட்டின் முனிச் பகுதியில் உள்ள டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே ரெயில்வே துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. அப்போது சுரங்கப்பாதை பணிக்காக அருகே துளையிட்ட போது இரண்டாம் உலகப்போர் காலத்தை சேர்ந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 4 சுரங்கத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதியில் வேறு வெடிகுண்டுகள் இருக்கிறதா எனவும் நிபுணர்கள் தேடி வருகிறார்கள்.
250 கிலோ எடையுள்ள அந்த குண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்து 76 ஆண்டுகள் கழித்து வெடித்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.