world

“நன்கொடை”களால் எகிறும் ராணுவ பட்ஜெட்

டோக்கியோ, டிச.11- ஆளும்கட்சிக்கு ஜப்பானின் பெரு நிறுவனங்கள் வாரி வழங்கும் கட்சி நிதியால் ராணுத்திற்கு ஒதுக் கப்படும் நிதி பெருமளவு அதிகரித்துள்ளது. அண்மையில் ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. தாராள மாக பணத்தைச் செலவழித்துதான் இந்த வெற்றி அவர்கள் பெற முடிந்தது. நாட்டின் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் ஆளும்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்பின. அதனால் தேர்தல் செலவுக்கான நிதியையும் வாரி வழங்கியுள்ளன. மறைமுகமாக வழங்கப்படும் நிதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே, நேரடியாக 20 பெருநிறுவனங்கள் வழங்கிய தேர்தல் நிதி மட்டுமே 30 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்தே வந்துள்ளது. 2021க்கான நிதியாண்டில் மட்டும் ராணுவத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 52 விழுக்காடு அதிகமாகும். தேர்தல் நேரத்திலும், மற்ற காலங்க ளிலும் ராணுவத் தளவாட ஒப்பந் தங்களை மேற்கொள்ளும் பெரு நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்குவதுதான் இதற்குக் காரண மாக இருந்து வருகிறது. நிதியை அதிகமாக வழங்கும் மிட்சுபிஷி நிறுவனத்திற்கு 2020 ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படகு கள், ரோந்து ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட தளவாடங்களை ராணு வத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந் தம் கிடைத்தது. அரசு வாங்கும் தளவாடங்களின் மதிப்பில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 18 விழுக்காடாகும். அதன் துணை நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 5 விழுக்காடு மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது.  ராணுவ தளவாடக் கொள் முதல் மற்றும் ஆளும்கட்சிக்குக் கிடைத்துள்ள நிதி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான அகஹதா மேற்கொண்ட ஆய்வு களில்தான் மேற்கண்ட விபரங்கள் கிடைத்துள்ளன.