மாண்டிவிடியோ, நவ. 27 - உருகுவேயின் புதிய ஜனாதி பதியாகப் பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் அடங்கிய “விரிவான கூட்டணி”யின் வேட்பாளரான யாமண்டு ஓர்சி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
அவருடன் இணைந்து போட்டி யிட்ட கரோலினா கோஸி துணை ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.
இரண்டாவது சுற்றில் வெற்றி
உருகுவேயின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்தலில் யாருக்கும்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதனால் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இடதுசாரிக்
கூட்டணியின் வேட்பாளரான யாமண்டு ஓர்சி மற்றும் அதிதீவிரவலதுசாரிக் கட்சிகளின் வேட்பாளரான அல்வரோ டெல்கடோ ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றில் போட்டியிட்டனர்.
கடந்த தேர்தலைப் போலவே முதல் சுற்றில் வெற்றி பெற்றாலும், இரண்டாவது சுற்றில் வலதுசாரி வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு இடதுசாரி வேட்பாளர் தோல்வி யடைவார் என்று கருத்துக் கணிப்பு கள் வெளியாகின. ஆனால், 49.85 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஓர்சி வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட டெல்க டோவுக்கு 45.86 விழுக்காடு வாக்கு கள் கிடைத்தன.
2 அவைகளிலும் கூடுதல் இடம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் நலன்களுக் கான கொள்கைகளை மட்டுமே நடைமுறைப்படுத்துவதில் ஆளும் வலதுசாரிக் கூட்டணி கவனம் செலுத்தியது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கூட்டணி நடைமுறைப் படுத்திய நலத்திட்டங்களை அனைத்தையும் சீர்குலைக்கவும் செய்தது.
இதனால், கடும் அதிருப்தி யில் இருந்த உருகுவே மக்கள், அமெரிக்க ஆதரவு நிலையை எடுத்த ஆளும் வலதுசாரிக் கூட்ட ணியைத் தேர்தலில் தோற்கடித்துள் ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட இடதுசாரிக் கூட்டணியே அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
பொதுத்துறை மீட்புக்கு மக்கள் ஆதரவு
இதனிடையே, மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் வைத்துள்ள மாற்றுக் கருத்துக் களும் கூட அரசின் கொள்கை களில் இணைக்கப்படும் என்றும் ஓர்சி தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கூட்டணி மக்க ளுக்கு அளித்த முக்கியமான வாக் குறுதி, பொதுத்துறையை மீட்பது ஆகும். முந்தைய ஆட்சியாளர் களின் நவீன தாராளமய முன்மொழி வுகளால் பொதுத்துறை சீரழிக் கப்பட்டு, பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டது. அதனை மீட்டெடுப் போம் என்ற இடதுசாரிக் கூட்ட ணியின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. அதுவே தற்போது தேர்தல் முடிவு களிலும் எதிரொலித்துள்ளது. உருகுவே ஜனாதிபதியாக இடது சாரிக் கூட்டணி தலைவர் ஓர்சி, 2025 மார்ச் 1 அன்று பொறுப்பேற்க உள்ளார்.
மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்கப் பாரம்பரியம்
அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் லகால்லே போ, “எப்போது வேண்டுமானாலும் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறேன். ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஓர்சிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கியூபா ஜனாதிபதி மிகுவோர் டியாஸ்-கானல், பிரேசில் ஜனாதிபதி லூலா, ஹோண்டுரஸ் ஜனாதிபதி சியாமாரோ காஸ்ட்ரோ, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஆகியோரும், ஓர்சிக்கு தங்களின் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வாழ்த்துச் செய்தியில், “இடதுசாரிப் பாதையில் நடைபோடும் லத்தீன் அமெரிக்கப் பாரம்பரியத்தை மக்கள் மீண்டும் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். நாடுகளின் மத்தியில் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த உருகுவே தேர்தல் வெற்றி பயன்படும்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடித்த அரசுகளை ஒவ்வொன்றாக மக்கள் தூக்கியெறிந்து வருகின்றனர். அதில் தற்போது உருகுவேயில் இணைந்துள்ளது.