நியூயார்க்,செப்.2- கியூப மக்கள் பிரட் தயாரிப்பதற்கு தேவையான 800 டன் மாவை அமெ ரிக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மக்கள் மன்றம் (peoples forum ) என்ற அமைப்பு முன்னெடுத் துள்ள “கியூபாவை வாழ விடுங்கள், எங்கள் அண்டை நாட்டினருக்கான ரொட்டி” என்ற பிரச்சாரத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை மூலம் இந்த 800 டன் மாவை அனுப்பியுள்ளனர். கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக இந்த அமைப்பு கியூபாவிற்கு ஆதரவாக அமெரிக்க மக்களை திரட்டி உதவி வருகிறது. தற்போதைய பிரச்சாரத்திற்கு மட்டும் 1,300 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து உதவியதாக அவ்வ மைப்பு வெளியிட்டுள்ள தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
கியூபா நமது அண்டை நாடு. நமது அண்டை நாட்டை நாம் பசியுடன் இருக்க விட முடியாது என்று மக்கள் மன்றத்தின் நிர்வாக இயக்குநர் மனோலோ டி லாஸ் சாண்டோஸ் கூறியுள்ளார். மேலும் கியூபாவை சுதந்திரமாக வார்த்தகம் செய்ய விடு வதன் மூலம் அவர்களது வறுமையை நீக்க முடியும்.ஆனால் கியூபர்கள் மீதான இந்த வறுமை அமெரிக்க அர சாங்கத்தால் நேரடியாக திணிக்கப்படு கிறது என்றும் அவர் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை விமர் சித்துள்ளார். அமெரிக்கா நடத்தி வரும் பொரு ளாதாரப் போரால் கியூபா குறிப்பிடத் தக்க உணவு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உணவு நெருக்கடி மட்டு மின்றி மருந்து மற்றும் பிற மனிதாபி மானப் பொருட்களின் தட்டுப்பாடுக ளும் அமெரிக்காவின் தடைகளால் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஆயிரக்க ணக்கான மக்களிடம் இருந்து நன் கொடைகளை வாங்கிய பிறகு, கியூபா விற்கு மாவுப்பொருட்களை வழங்குவ தில் பல்வேறு சவால்களை எதிர்கொள் வதாகவும் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.