நியூயார்க், ஆக.16- அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் பண வீக்கம், பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் குழந்தைகளைப் பராமரிப்பது, காப்பீடு செலுத்துவது, மருத்துவத்திற்குச் செலவு செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா சென்றால் பிழைத்துக் கொள்ள லாம் என நம்பிக்கொண்டிருக்கும் பல நாட்டு இளைஞர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்காவின் போர் பொருளா தாரக் கொள்கை காரணமாக கடந்த காலங்களில் அங்கு பல பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளை பராமரிக்க முடியாமலும், தங்களுக்கான காப்பீட்டுத் தொகை யை செலுத்த முடியாமலும் அமெரிக்கர்கள் தவிப்பதாக ஏகாதிபத்திய ஊதுகுழலான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையே செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பொருட்களின் விலை அமெரிக்கர்களுக்கு கண்ணீரை வர வைக்கிறது என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணங்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப் பட்டுள்ளது. ஆயுத நிறுவனங்களுக்கு பிறகு அமெரிக்காவில் காப்பீட்டு நிறு வனங்களே அதிக கொள்ளையடிக்கும் நிறு வனங்களாக உள்ளன. இந்நிலையில், மருத்துவம் பெறுவதற்குக் கூட காப்பீடு அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.
காப் பீட்டுக் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்ந்து அமெரிக்காவில் உள்ள தொழிலாளர் வர்க் கம், நடுத்தர வர்க்கம் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முடி வெட்டுவது, முதியோர் பராமரிப்புச் சேவைகள் கூட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை குறைத்துக் கொண்டுள் ளார்கள். உணவுத் தேவைகளைக் கூட குறைத்து வருகிறார்கள். வீட்டின் அத்தியா வசியச் செலவினங்களே அவர்களது ஊதி யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனை ஈடு செய்ய போதிய ஊதியம் வழங்கப் படுவதில்லை என்ற சூழல் நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.