மதுராந்தகம், டிச.17- மதுராந்தகம் ஏரியை ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் அணையாக மாற்றி ஒரு டி.எம்.சி தண்ணீர் தேக்கிவைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட த்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2411 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் முழு கொள்ளளவு 23.3 அடியாகும். ஏரியில் 964 கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேலும், 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை மதுராந்தகம் ஏரி போக்கி வருகிறது. மதுராந்தகம் ஏரி 60 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு ஏரி தூர்வாரப்படாத தால் 6 முதல் 7 அடி வரை வண்டல் மண் சேர்ந்துள்ளது. எனவே ஏரியை தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் தொடர்ந்து விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை வலியுறுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில்‘ 10 லட்சம் லாரிக்கு மேல் மண் எடுத்தால் மட்டுமே ஏரியை முழுமையாக தூர்வார முடியும். ஏரியிலிருந்து எடுக்கப்படும் மணலை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தூர்வாரும் பணி துவங்கப்படாமல் உள்ளது’ என்கின்றனர். ஏரியில் உள்ள 110 தானியங்கி ஷட்டர் உபரி நீர் செல்லும் கலங்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்பொழுது இவை சிறிது சேத மடைந்துள்ளதால், ஏரியின் பாதுகாப்பு கருதி ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஏரியை அணையாக மாற்ற அதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஏரியின் கொள்ளளவு 694 கனஅடியாக உள்ள தண்ணீரை ஒரு டிஎம்சி யாக தேக்கிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த ஒரு டிஎம்சி தண்ணீரை 700 கன அடி தண்ணீர் விவசாயத்திற்கும் 300 கன அடி சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வழங்கும் வகையில் அணை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஏரியை ஆண்டுதோறும் பகுதிவாரி யாக தூர் வாரவும் திட்ட அறிக்கை தயாரித்து வருவ தாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர். இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் மதுராந்தகம் ஏரியில் செவ்வாயன்று (டிச.17) படகில் சென்று ஆய்வு செய்த னர்.