tamilnadu

செங்கல்பட்டு மாவட்டத்தில்  அனைத்து கூட்டங்களும் ரத்து

 செங்கல்பட்டு, மார்ச் 18- செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும்  வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன்பும். சென்று வந்த பின்பும் கைகளை சுத்தப்ப டுத்தும் திரவத்தினை கொண்டு, கைகளை சுத்தம் செய்து  கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு  அரசு கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனை கள், மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தீவிர நோய் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை திறப்பு 
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிட மிருந்து புகார்கள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 044-27427412 மற்றும் 044-27427414 செயல்படும் கட்டுப்பாட்டு அறை  திறக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை தோறும் நடை பெறும் மக்கள் குறைதீர் கூட்டம் வேளாண்மை குறைதீர்  கூட்டம் முதியோர் குறைதீர் கூட்டம் அஞ்சலக குறைதீர்  கூட்டம் எரிவாயு குறைதீர் கூட்டம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்  களிலும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
என்ன சாப்பிடவேண்டும்
3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே  அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீர், ஓ.ஆர்.எஸ்.  கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை பருக  வேண்டும். என மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ், தெரி வித்துள்ளார்.

;