செங்கல்பட்டு, ஜூன் 20- செங்கல்பட்டு நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது நகராட்சி ஊழியர் லிடியா செல்வகுமார் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற் பட்டுள்ளது. ஆணைய ருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சி புரம் - செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறு கையில், “ஆணையருக்கு தொற்று பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவு படுத்தி. ஊழியர்களி டையே நிலவும் அச்சத்தை போக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் அனை வருக்கும் தொடர் பரி சோதனை செய்ய வேண்டும்” என்றார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யர் ஜான்லூயிசிடம் தமிழ்நாடு நகராட்சி, மாநக ராட்சி அலுவலர் சங் கத்தின் பொதுச்செயலாளர் மு.தாமோதரன் மனு அளித்துள்ளார்.