tamilnadu

ரூ.100 கோடி கள்ளநோட்டுகள்  பறிமுதல்

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.இந்த கும்பல்,  பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்துகொடுத்து மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரிடம் தகவல்களை பெற்ற மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும்கைது செய்தனர். கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

;