tamilnadu

img

பரூக் அப்துல்லாவை சந்திப்பேன் : வைகோ

சென்னை, செப்.16- பரூக் அப்துல்லாவை உரிய நேரத்தில் ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்திப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இதுகுறித்து செய்தியா ளர்களை சந்தித்த வைகோ, “பரூக் அப்துல்லாவை வீட்டுக் காவலிலிருந்து மீட்க உச்சநீதி மன்றத்தில் நான் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது  விசாரணை நடைபெற்றது. எனது சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதாடினார்” என்றார்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு விட்டன. பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார் என்று ஒரு தரப்பு அரசுப் பிரிவு சொல்கி ன்றது. அவர் வீட்டுச் சிறையில் இல்லை என்று மற்றொரு தரப்பு அரசு பிரிவு கூறுகின்றது.  அப்படி என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்திக்கமுடியுமா? பரூக் அப்துல்லாவின் 40 ஆண்டு கால உயிர் நண்பர் வைகோ. அதனால்தான் மாநாட்டுக்கு அழைத்தார். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்பு கொள்ள முடிய வில்லை.நெருக்கடி நிலை காலத்தைப்போல அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு விட்டனவா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்று வழக்கறி ஞர் அஜ்மல்கான் வாதங்களை வைத்தார்.

அவரது விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், 30ஆம் தேதிக்குள் அரசு இதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள். இதை மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். ரத்த சொந்தங்கள் தவிர்த்து மற்றவர்களுக்குத் தகவல் தர இயலாது. அதற்கான ஆட்கொணர்வு மனுவாக இதைப்பார்க்க முடியாது என்று மத்திய அரசின் வழக்கறிஞர்கள் தெரிவித்து இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, நீதிபதிகள் அதை ஏற்கவில்லை என்றார். காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றி நீங்கள் நேரில் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? என்ற கேள்விக்கு, “காஷ்மீர் ஒரு சிறைக்கூடமாக்கப்பட்டு விட்டது என்றும் வைகோ கூறினார்.