tamilnadu

img

வேலூர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வேலூரில் கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.    

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல ஜவுளி கடையில் பணியாற்றி வந்த 24 வயது பெண்  ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வேலூர் கோட்டை பூங்காவுக்கு சென்றுகொண்டிருந்த போது காதலனை தாக்கி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை, செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவருக்கும் தலா ரூ.16ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

;