tamilnadu

img

உலக புகழ்பெற்ற "ஸ்பெல்லிங் பீ" போட்டி ரத்து

வாஷிங்டன்
ஆங்கில வார்த்தைகளைக் கூறி அதன் பின் அந்த வார்த்தையை எழுத்துக்கூட்டிச் சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். புகழ்பெற்ற இந்த போட்டியில் உலக நாடுகளிருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள்.  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து வாகை சூடி வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பாண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி வரும் மே மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்து செய்யப்படுவதாகப் போட்டியை நடத்தி வரும் ஸ்கிரிப்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

1925-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த  ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி 2-ம் உலகப்போர் காரணமாக 1943 முதல் 1945 வரை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 75 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனவால் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

;