திருவில்லிபுத்தூர், மே 20- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலத்தொட்டியப்பட்டியை சேர்ந்த லட் சுமி தினமும் மாடுகளை மேய்க்க செல்வது வழக்கம். வழக்கம்போல் மாடுகளை மேய்த்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள 30 அடி தண்ணீர் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார் இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் திரு வில்லிபுத்தூர் நகர் போலீசாரும் தீய ணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி லட்சுமி உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோத னைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.