விழுப்புரம், செப்.18- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பவர்களோடு கூட்டு சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் வட்டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கே.முருகன் தலைமை தாங்கி னார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.அர்ச்சுணன், எஸ். அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இடைக் குழு உறுப்பினர்கள் ஆர்.ரவிசந்தி ரன், எம்.ராஜாராமன், ஆர்.சேகர், எஸ்.பாலமுருகன், ஏ.அன்சாரி,ஐ.சேகர்,கே.நடராஜன்,பி.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கிரைனைட், கனிம வளம், மணல் கொள்ளை ஆகியவற்றில் வானூர் வட்டாட்சியர் தங்கமணி கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு முறைகேடுகளில் ஈடு பட்டு வருகிறார். ஆனால், ஏழை விவ சாயிகள் சொந்த நிலத்திற்கு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கிறார். உடனடியாக இவரை இட மாற்றம் செய்வதோடு இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.