விழுப்புரம், மே 10 - விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளைத் தெரிவிக்க அலுவ லர்களின் மொபைல் எண்கள் அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: கொரோனா தொற்றைத் தடுக்க பொது மக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிற்குள் இருத்தல் வேண்டும். தவிர்க்க இயலாத கார ணங்களால் மட்டுமே வெளியே வர வேண்டும். வெளியில் வருபவர்கள் முகக்கவ சம் கட்டாயம் அணிய வேண்டும். பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளை சுற்றுப்புறங் களில் செல்ல அனுமதிக்க கூடாது.
மேலும், கொரோனா நோய் தொற்று குறித்த இலவச மருத்துவ ஆலோசனைக்கு அரசு மருத்துவ ஆலோசனை எண் 104ஐ அணுக வேண்டும். தற்போது கொரோனா நோய் தொற்று தடுப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப் பிக்கபட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அது குறித்த புகாரை குழந்தைகளுக்கான இல வச தொலைபேசி எண் 1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எண் 9600753549 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள லாம். மேலும், பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை சார்ந்த பிரச்னைகளை விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலரின் தொலை பேசி எண்ணில் 9566936955 புகார்களை தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.