tamilnadu

img

விருதுநகர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா

விருதுநகர், அக்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் செய லாளர் அ.சேகரின் ஐந்தாமாண்டு நினைவு தினத்தையொட்டி தீக்கதிர் சந்தா வழங்கும் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தீக்கதிர் சந்தா தொகை ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 800 வழங்கப்பட்டது.  விருதுநகர், தேசபந்து மைதா னத்தில் நடைபெற்ற  தீக்கதிர் சந்தா வழங்கும் விழா, பொதுக் கூட்டத்திற்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். நகர்குழு உறுப்பி னர்கள் தேனிவசந்தன், எஸ்.கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு வரவேற்புரையாற்றினார்.  மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பி. நேரு நன்றி கூறினார். மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தீக்கதிர் சந்தா 
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி,  தீக்கதிர் சந்தா தொகை  ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 800- ஐ அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். 

;