மேட்டூர், ஜூலை 23 - கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதி கரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக அந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும், கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 8,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் செவ்வாயன்று மேட்டூர் அணையை வந்தடை ந்தது. பிற்பகலுக்குப் பின்னர் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடி யாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட நீர் வெளி யேற்றம் வெகு குறைவு என்ப தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.