tamilnadu

img

ஊரடங்கு காலத்தில் ஊருக்கெல்லாம் வெளிச்சம் தர பணியாற்றும் மின்ஊழியர்கள் - எஸ்.ராஜேந்திரன்

உலகம் முழுவதும் ஏற் பட்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் தொற்று கார ணமாக இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த மார்ச் 24ஆம் தேதி மாலையிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள், சுகா தாரப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை யினர் ஆகியோருக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால் மின் துறையை மட்டும் எந்த அறிவிப்பி லும் சேர்ப்பதற்கு மனமில்லை போலும். மருத்துவர்கள் கண்ணுக் குத் தெரியாத அந்த வைரசுடன் எதிர்கொண்டு போராடுவது போல, மின் ஊழியர்கள் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தை மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மல் வழங்க பணியாற்றி கொண்டி ருக்கிறோம்.

தமிழக அரசு மின்சாரத்துறை என்ற ஒரு துறை இருப்பதை மறந்து விட்டது என சுட்டிக் காட்ட விரும்பு கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் மக் கள் வீட்டில் இருப்பதற்கும், அதே போல மருத்துவமனையில், காவல் நிலையத்தில் அரசு அலுவலகத் தில், அரசின் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதற்கும் எங்களது பணி உன்னதமானது என்பதில் மின் ஊழி யர்களுக்கு பெருமையே! இந்த ஊரடங்கு காலத்திலும் மின் நுகர்வோர்களுக்கு தடை யில்லா மின்சாரம் வழங்க தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றி யும் கவலைப் படாமல் தமிழக அர சும் தமிழக காவல்துறையும் மதிக்கா விட்டாலும் தொடர்ந்து தான் ஏற்றுக் கொண்ட கடமையில் உறுதியாக பணியாற்றி வருபவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையே!

ஊரடங்கின் பின்னணியில் மின் சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய அலுவலகங்க ளில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உற்பத்தி நிலையங்களிலும், தலைமை அலுவலகம், மத்திய அலு வலகம், கோட்ட அலுவலகம் உள் ளிட்ட அலுவலகங்களில் சமூக இடைவெளி என்பது ஊழியர்கள் குவியலாக பணியாற்றி வரும் சூழ லில் பின்பற்ற முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 

மின் ஊழியர் மத்திய அமைப்பு தொடர்ந்து மின் வாரியத்திடம் வற் புறுத்தி வந்த நிலையில் தற்பொழுது சில சலுகைகளை அளித்துள்ளது. ஆனாலும் பாதுகாப்பு முக கவ சம் மற்றும் சானிடைசர் போன்றவை முழு அளவில் விநியோகிக்கப்பட வில்லை எனச் சுட்டிக்காட்டி தொட ர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழக அரசின் பணிகளில் நாங் களும் இணைந்து நிற்க வேண்டும் என்ற முறையில் ஒரு நாள் ஊதி யத்தை ஏப்ரல் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்திட கேட்டுக் கொண் டுள்ளோம். ஊரடங்கு அமலில் உள்ள நிலை யில் மின் கட்டண தொகையை வசூல் செய்ய கோருவது, பொது மக்கள் மின்கட்டண தொகையை செலுத்த வருவது என்பதிலும் சமூக விலகல் என்பது அமலாகவில்லை. இதை தொடர்ந்து சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒப்பந்த தொழிலாளர்கள்

மின்வாரியத்தில் பல ஆண்டு களாக பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த கோரிக்கை வைத் தும் தமிழகஅரசும் மின் வாரியமும் இன்றுவரை ஏமாற்றி வருகிறது.

தற்போது இந்த ஊழியர்கள் ஊர டங்கு உத்தரவின் காரணமாக பணி செய்ய முடியாமல் மிகவும் உண வுக்காக சிரமப்பட்டு கொண்டி ருக்கின்றார்கள். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தோழர் களும் நல்ல உள்ளம் கொண்ட சில ரின் உதவியோடு பல்வேறு இடங்க ளில் இந்த ஒப்பந்த தொழிலாளர் களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். இந்தச் சூழ் நிலையில் இவர்களுடைய வாழ்வா தாரத்தை கணக்கில் கொண்டு ஊர டங்கு காலத்தில் பணி செய்ய முடி யாத சூழலையும் கணக்கில் கொண்டு மின்சார வாரியம் கடந்த 22.2.2018 ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந் தத்தின் அடிப்படையில் ரூ.380 தினக்கூலியாக அளித்திட வேண் டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தத் தொழிலாளர்கள் தான் தமிழகத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்பட்ட பொழுது விரைந்து மின் வினி யோகத்தை சீர்செய்துதமிழக அர சுக்கு பெருமை சேர்த்தவர்கள் என் பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காலத்தில் தடை யில்லா மின்சாரத்தை வழங்க முற் பட்ட பொழுது காஞ்சிபுரத்தில் மோகன் (கம்பியாளர்) மின் விபத்தில் மர ணமடைந்துள்ளார். திருச்சியில் முருகேசன் (மின்பாதை ஆய்வா ளர்), பட்டுக்கோட்டையில் பூமி நாதன் (கள உதவியாளர்) ஆகியோ ரும் மின் விபத்தில் சிக்கி தற் பொழுது திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை வாரிய செலவிலேயே அளித்திட வேண்டும் என்றும் அதேபோல மோகன் குடும் பத்திற்கு மத்திய - மாநில அரசுகள் அறிவித்த அனைத்து நிதி உதவி களையும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட காலத்தில் ஏற்பட்ட விபத்து என்ற முறையில் அளித்திட வேண்டும் எனவும் கேட் டுக்கொள்கிறோம்.