சென்னை, ஆக.7 - மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, சென்னை யில் உள்ள முரசொலி நாளிதழ் அலு வலகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதனன்று திறந்து வைத்தார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள், ஆகஸ்ட் 7 புதனன்று கடைப்பிடிக்கப் பட்டது. இதையொட்டி, முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் அவரது உருவச்சிலையினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதனன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கரு ணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இச்சிலையானது, அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.