tamilnadu

img

இந்திய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்

முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அசோக் லவாசா தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.

அசோக் லவாசா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பின்னர்  முன்னாள் நிதி செயலாளர் ராஜிவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.