காரைக்கால் பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார். ஆட்சியர் அர்ஜூன்சர்மா வரவேற்றார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அசனா, கீதா ஆனந்தன், முருகன், ஜெயமூர்த்தி, துணை ஆட்சியர், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.