சென்னை, நவ.9- மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்ப டுத்த ரூ. 615 கோடி செலவில் 100 ஏரி களை நிரப்பும் திட்டம் செயல்ப டுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் கொங்கனாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு 25 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 18 கோடியே 89 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 43 பணிகளை தொடங்கி யும் வைத்த முதலமைச்சர், 112 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்தும் வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஒன்றரை மாதங்க ளுக்கு முன்பு தொடங்கப்பட்ட முதல மைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத் தில் தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் 9,72,214 மனுக்கள் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவற்றில் 5,11,186 மனுக்கள் ஏற்கப் பட்டுள்ளது என்றும் 4,37,492 மனுக் கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேட்டூர் அணை உபரிநீரை 4 சட்ட மன்ற தொகுதிகளும் பயன்படுத்தும் வகையிலான திட்டத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டுக்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்ப டும் என்று கூறிய முதலமைச்சர், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். காவிரி - குண்டாறு திட்டத்துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்படும் என்று கூறிய அவர், அதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, திண் டுக்கல், தேனி, விருதுநகர் மாவட் டங்கள் பயன்பெறும் என்றார்.