tamilnadu

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் ஆட்சியர்களுக்கு மத்திய ஆணையம் அறிவுறுத்தல்

சேலம்,செப்.24- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுயள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாயன்று காலை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி யதால் முழுநீர்வரத்தும் வெளியேற்றப்படும். மேட்டூர் அணைக்கு செவ்வாயன்று மாலை நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும், இரவு 12 மணிக்குள் நீர்வரத்து 50 ஆயிரம் கன  அடியை தாண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரு வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றும் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறி வுறுத்தியுள்ளது.