tamilnadu

img

கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் பயிற்சி மையங்களில் ரூ 30 கோடி பறிமுதல்

கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் பயிற்சி மையங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.30 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கப்படும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் மூலம் சுமார் ரூ.30 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ. 150 கோடி வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.


 

;