tamilnadu

img

இறுதிக் கட்ட சோதனையில் 35 தடுப்பூசிகள்

லண்டன்:
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.  35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட்  தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறுகையில், மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை. கொரோனாவுக்கு  இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1500 கோடி தேவைப்படும். 

35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இது உலகில்  அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். கொரோனா தடுப்பூசிக்காக  உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால்இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை என்று தெரிவித்தார்.புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது.

;