லக்னோ:
கடந்த 2016 நவம்பர் 8-ஆம்தேதி பிரதமர் நரேந்திர மோடிஅப்போது புழக்கத்தில் இருந்த500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார்.
இதன் நான்காமாண்டை ஞாயிறன்று நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு கறுப்புப் பணப் புழக்கம் குறைந்து விட்டது என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலை வர்கள் பலரும் மோடியின் கருத்தை நிராகரித்தனர். பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு என்றும் பதிலடி கொடுத்தனர். அந்தவகையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.அதில், “பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகும், நான்கு ஆண்டுகளாக போலி பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன.சொல்லப்போனால், பணமதிப்பு நீக்கத்திற்கு பின்புதான்ஊழல் அதிகரித்துள்ளது. கறுப் புப் பணம் குறையவில்லை. கறுப்புப் பணத்திற்கு எந்தவித கணக்கீடும் இல்லை.
பிரதமர் உறுதியளித்தபடி, மக்களும் தங்கள் கணக்குகளில் ரூ. 15 லட்சம் பணத்தைப் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.இதேபோல ராகுல் காந்தியும், மோடியை விமர்சித்துள்ளார்.“இந்தியாவின் இந்தப் பொரு ளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று இந்தியாவைக் கூறிய நிலையில், தற்போது இந்தியப் பொருளாதாரத்தை வங்கதேசம் முந்திச் சென்றுள் ளது. அந்த நாட்டையும்தான் கொரோனா பாதித்தது. எனவே,இந்தியாவின் பொருளாதாரச் சீரழிவுக்கு கொரோனா காரணம்அல்ல. உண்மையான காரணம், மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரியும்தான்” என்று ராகுல் காந்திசாடியுள்ளார்.