tamilnadu

img

மும்பை தாராவியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு 

மும்பை
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவி பகுதியில் (மகாராஷ்டிரா) தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாநில அரசு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. 

தாராவியில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தாராவியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

மாநில நிலவரம்: மகாராஷ்டிரா 
கொரோனா வைரஸ் பாதிப்பு : 1666
உயிரிழப்பு : 110  
 

;