மதுரை, ஆக.30- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளைஞரை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் தலைமறைவாகி யுள்ளனர். அலங்காநல்லூர் அருகே அய்யணக் கவுன்டன் பட்டியைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பிரினரி டையே மோதல் ஏற்பட்டதில், ஆண்டவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அய்யணக்கவுன்டன் பட்டியைச் சேர்ந்த பாரதியின் மகன் ஜெயசூர்யா 22. இவரும் அவரது சித்தப்பா பாலனும், அலங்கா நல்லூர் கல்லனையிலிருந்து, அய்யனக் கவுன்டன் பட்டிக்கு சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டி ருந்தனர். சின்ன இலந்தைக் குளம் அருகே இவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வர்கள் மோதி கீழே தள்ளியதில் பாலன் ஓடிவிட்டார்.ஜெயசூர்யாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லும் வழியிலே இறந்தார். இறந்த ஜெயசூர்யா அலங்காநல்லூர் கல்லனையில் கனரா வங்கி பகுதியில் குடி யிருந்தார். இக் கொலை குறித்து அலங்காநல்லூர் போலீஸார், ஆண்டவர் மகன் மஞ்சமணி மற்றும் மூவர் மீது வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.