புதுதில்லி, அக். 25 - கிழக்கு லடாக்கின் டெம்சோக், செப்சாங் ஆகிய 2 பகுதிகளில் பரஸ்பரம் படைகளை விலக்கிக் கொள்ளும் பணி யை இந்தியாவும் சீனாவும் துவங்கி யுள்ளன. கடந்த 2020 ஜூன் 15 அன்று இந்திய - சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், பேட்ரோல் பாய்ண்ட் 14-இல் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியத் தரப்பில் 20-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், சீனத் தரப்பில் பலியானவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. அப்போது முதல், இந்திய - சீன எல்லையில் இரண்டு தரப்பிலும் பதற்றம் அதிகரித்தது. பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டி ருந்தாலும், மறுபுறத்தில் இரு நாடுகளுமே எல்லையில் வீரர்களைக் குவித்தன. தற்காலிக கூடாரங்கள் அமைத்து வீரர்கள் தங்கினர். இத னால் எல்லையில் நடக்கும் வழக்க மான பணிகள் அனைத்தும் தடைப் பட்டன. ரோந்துப் பணிகள் கூட முறை யாக நடக்கவில்லை. இந்நிலையில் தான், 4 ஆண்டு களுக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை யன்று (அக். 21), எல்ஏசி எனும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரோந்து செல்லும் விஷயத்தில் இருநாடு களுக்கும் இடையே ஒரு முக்கிய முன் னேற்றமும், உடன்பாடும் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டை இந்தியா - சீனா ஆகிய இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிப் படையாக அறிவித்தனர். ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும், சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் அதி காரப்பூர்வ சந்திப்பை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையே சுமூக உறவு நிலவுவதை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடன் பாட்டின் படி, கிழக்கு லடாக்கில் எல்ஏசி எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் குவிக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே திரும்பப் பெறத் துவங்கியுள்ளன. இரு தரப்பும் தங்களின் ஒரு கூடாரம் மற்றும் சில தற்கா லிக கட்டமைப்புகளை அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் சார்டிங் நாலாவின் மேற்குப் பகுதிக்குத் திரும்பும் அதே நேரம் சீன வீரர்கள் நாலாவின் கிழக்குப் பகுதிக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் இரு தரப்பிலும் சுமார் 10 முதல் 12 தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் சுமார் 12 கூடாரங்கள் உள்ளன. அவை வரிசையாக ஒவ்வொன்றாக அகற்றப்படும் எனத் தெரிகிறது. ராணுவ கட்டமைப்புகள் மட்டு மின்றி சீன ராணுவம் அப்பகுதியில் உள்ள தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. அதற்குப் பதிலாக இந்திய ராணுவ மும் சில படைகளைத் திரும்பப்பெற் றது. இந்த செயல்முறை முடிந்ததும், அடுத்த 4, 5 நாட்களில் எல்லையில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ரோந்துப் பணிகள் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.