tamilnadu

img

சொன்னதைச் சொல்கிறோம்....மதுரை மருத்துவமனையில் 1,600 தற்காப்பு ஆடைகள் உள்ளதாம்

மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்புக்காக 1,600 தற்காப்பு உடைகள் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் கூறியுள்ளதாக வெளியான தகவல்கள் வருமாறு:-

கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப் படுவோருக்கு தடையின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் 150 செயற்கை சுவாசக் கருவிகள் தயார்  நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. ட்ரிபிள்-ஏ முகக் கவசங்கள் 62 ஆயிரமும், என்-95 முகக் கவசங்கள் 6 ஆயிரமும், 1,600 தற்காப்பு உடைகளும் உள்ளன. கை சுத்திகரிப்பான் தொடா்ந்து அரசு அலுவலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

250 பரிசோதனைகள்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கண்டறியும் ஆய்வகத்தில், நாள் ஒன்றுக்கு 250 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடிய வசதி உள்ளது. இந்த ஆய்வகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.