விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : முதல்வர் உத்தரவு
தூத்துக்குடி, ஜூலை 3- தூத்துக்குடி அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள் ளார். தூத்துக்குடி மாவட்டம், செக்கா ரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வ தற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூ ரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இசக்கி ராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (20) ஆகிய 4 பேர் வந்துள்ளனர். முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும் பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் இறங்கியுள்ளனர். பின்னர் அவர்களும் வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையா ளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் உள்ளே இறங்கி பார்த்தபோது போது விஷவாயு தாக்கி 4பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 4பேரின் உடல்களும் வெளியே மீட்கப் பட்டது. இதுகுறித்து தட்டப்பாறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தர விட்டுள்ளார்.மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பணியில் 900 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள்
அமைச்சர் உதயகுமார் தகவல்
மதுரை, ஜூலை 3- கொரோனா மூன்று அல்லது நான்கு மாதங்கள் உச்சத்தைத் தொட்டுதான் படிப்படியாக குறையும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறைஆர்.பி.உதயகுமார் வியாழ னன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 2,858 பேர்களில் 874 பேர் குணமடைந்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1949 போ சிகிச்சை யில் உள்ளனர். அடிப்படை வசதியை பொ றுத்த வரையில் அரசு இராஜாஜி மருத்துவமனை 1400ம், மற்ற அரசு மருத்துவமனைகளில் 708ம், தனியார் மருத்துவமனைகளில் 260ம், கோவிட்-19 கேர் சென்டர்களில் 2780 என மொத்தம் 5148 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 1,949 படுக்கைகள் பயன்பாட்டிலும், 3199 படுக்கைகள் தயார் நிலையிலும் உள்ளன. இப்பணியில் 923 மருத்து வர்களும், 1075 செவிலியர்களும், 2900 களப்பணியாளர்களும் உள்ளனர். 40 பேர் இறந்துள்ளனர். தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இருக்க தனி கவனம் செலுத்தப்பட்டுள் ளது. பொதுவாகவே மூன்று அல்லது நான்கு மாதங்கள் இந்நோய் உச்சத் தைத் தொட்டுதான் படிபடியாக குறையும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். விரைவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இந்த நிலையில், வியாழனன்று 273 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது
ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேட்டி
திண்டுக்கல், ஜூலை 3- கொரோனாவை வைத்து அதிமுக அரசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது யார் என்ன அறிவுரை கூறினா லும் அதனை முதல்வர் கேட்க தயாராக இல்லை திமுக முன்னாள்அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். திண்டுக்கல்லில் அவர் வியாழனன்று அளித்த பேட்டி:- திண்டுக்கல் மாவட்டத் தில் நகர்ப்புறங்களில் பரவி வந்த கொரோனா தற்பொ ழுது கிராமப்புறங்களில் பரவத் தொடங்கியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகப் பரவலாக கொரோனா மாறியுள்ளது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் அளவிற்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள் ளது இதற்கு முழுக்காரணம் தமிழக அரசு தான். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு தோற்றுவிட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர்கள் மூன்று மாத காலமாக வெளியே வர வில்லை. அறிக்கைகள் தான் கொடுத்துக் கொண்டிருந் தார்கள். கொரோனாவை வைத்து அதிமுக அரசு அர சியல் செய்து கொண்டிருக்கி றது. கொரோனா தொடர்பாக யார் அறிவுரை சொன்னா லும் அதைக் கேட்பதற்கு தமி ழக முதல்வர் தயாராக இல்லை. மாநில உரிமை களை மத்திய அரசிடம் அதி முக அரசு பறிகொடுத்து வரு கிறது. இந்த அரசு எதற்கும் லாயக்கற்ற அரசு என்றார்.