மதுரை:
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகத்தில் தமிழில்படித்தவர்கள் குறைந்து வருகின்ற னர் என்று வேதனையுடன் கூறினர்.
தமிழ் வழியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 4 புதன்கிழமையன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியிலிருந்தே தமிழ் வழி பயின்றவர்களா? என கேள்வி எழுப்பினர். பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா?. தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்.தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன்
இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.