tamilnadu

img

அரசு கல்லூரியில் தமிழ்க்கூடல் விழா

அரசு கல்லூரியில் தமிழ்க்கூடல் விழா

புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற விழா விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை  தலைமை வகித்தார்.  கணினி அறிவியல் துறைத் தலைவரும், மேனாள் முதல்வருமான முனைவர் து.சண்முகசுந்தரம், தமிழ் துறைத்  தலைவர் முனைவர் கா.காளிதாஸ், ஆங்கில துறைத் தலைவர் அ.கணேசன், வணிகவியல் துறைத் தலைவர் முனை வர் கு.சீனிவாசன், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர்  முனைவர் மு.அன்பழகன், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை இணைப் பேரா சிரியர் ஆர்.ராஜ்மோகன் ஆகியோர் மாணவ, மாணவி யர்களை வாழ்த்திப் பேசினர். விழாவில் தமிழ்த் துறை விரிவுரையாளர்கள் உள்ளிட்ட  அனைத்து விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.