tamilnadu

மதுரை கபடி வீரர் சிலை அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை:
மதுரை செல்லூரில் கபடி வீரர் சிலை அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதித்துள்ளது.மதுரை செல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைஅமைக்க 2014-ல் ஆறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க அனுமதிபெறப்பட்டது. சிலை அமைக்க ஏற்பாடுகள்நடைபெற்று வந்த நிலையில் போக்குவரத்துநெரிசலை காரணம் கூறி 2016-ஆம் ஆண்டுஅனுமதி மறுக்கப்பட்டது.தற்போது அதே இடத்தில் கபடி வீரரின்சிலை அமைக்க அமைச்சர் செல்லூர் ராஜூஅடிக்கல் நாட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலைக் காரணமாகக் கூறி அழகுமுத்துக்கோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில் கபடி வீரர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது சட்டவிரோதம்.எனவே, செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் கபடி வீரன் சிலை வைக்க தடை விதித்து, அதே இடத்தில் அழகுமுத்துக்கோன் முழு உருவச் சிலையை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.செல்லூர் பாலம் இறங்கும் பகுதியில் சாதி, அரசியல் தலைவரின் சிலை நிறுவப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியும், அங்குஎன்ன சிலை நிறுவப்படவுள்ளது என்பதுகுறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பின்னர், இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரையில் பல இடங்களில் புராதன சின்னங்களின் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக செல்லூரில் கபடி வீரன் சிலை அமைக்கப்படுகிறது என்றார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள், சாதி தலைவர்களின் சிலைகளை வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். கபடி வீரன்சிலை வைத்தால் அதுபோன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. எனவே கபடி வீரன்சிலை அமைக்கலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து உத்தரவிட்டார்.

;