tamilnadu

img

புதுச்சேரி பாஜக - என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து பிரச்சாரம்

புதுச்சேரி பாஜக - என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து பிரச்சாரம்

புதுச்சேரியின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக - என்ஆர் காங்கிரஸ் அரசைக் கண்டித்து,  ஜூன் 15 முதல் 22 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக சனிக்கிழமையன்று புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற பிரச்சாரத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம், வி.பெருமாள், சீனிவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, கொளஞ்சியப்பன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜோதிபாசு, ராம்ஜி, சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலெட்சுமி, தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, வடக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் புவியரசி, வெ.ரவிக்குமார், செல்வக்குமாரி, மாமன்ற உறுப்பினர் பா,விமலா, தோழர் அம்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.