tamilnadu

img

ஓய்வூதியர் சங்க மாநில பேரவை வரவேற்பு குழு கூட்டம்...

மதுரை:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பேரவை வருகின்ற டிசம்பர் 29 ஆம்தேதி மதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கில் நடைபெற உள்ளது. 

அதனை முன்னிட்டு செவ்வாயன்று வரவேற்பு குழு கூட்டம் மதுரை யில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது. இதில் வரவேற்பு குழு தலைவராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு ஓய்வூதியர்கள் சங்க மாநில கௌரவத் தலைவர் எம்.பரமேஸ்வரன்,  செயலாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரைமாவட்ட செயலாளர் பி. பாலசுப்பிர மணியன், பொருளாளராக  மாவட்ட பொருளாளர் என். ஜெயராமன்  மற்றும்வரவேற்புக்குழு  ஒருங்கிணைப் பாளர்களாக  மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் ,மாவட்ட தலைவர் குரு.தமிழரசு உள்ளிட்டு 36 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.