tamilnadu

img

உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு

மதுரை, ஜூன் 10- மதுரை மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று மூன்றாவது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக அரசு உத்தரவின்படி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் இன்றுவரை எங்களது உடற் பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மதுரை நகரில் இயங்கி வந்த 140 உடற்பயிற்சி மையங்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப் படைந்துள்ளது. உடற்பயிற்சி மையங்களை திறப்பதற்கான அனுமதி கோரி மே 15 மற்றும் ஜூன்1 ஆம் தேதி என்று இரண்டு முறை மனு அளித்துள்ளோம். தாங்களும் தகுந்த நடவ டிக்கை எடுப்பதாக கூறியிருந் தீர்கள். தற்போது அனைத்து உண வகங்கள் மற்றும் காபி பார்களில் அமர்ந்து உணவருந்தவும், டீ, காபி குடிக்கவும், பெரிய துணிக் கடைகளை திறக்கவும் அரசு அனு மதி அளித்துள்ளது. தமிழகத்தில் அதுவும் மதுரையில் 1000 முதல் 1500 சதுர அடி இடம் கொண்ட உடற்பயிற்சி மையங்கள் அது வும் தனியாக செயல்படுகிறது.

அதில் உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மட்டுமே நடைபெறுகி றது. குளிர்சாதன வசதிகொண்ட உடற்பயிற்சி மையங்கள் குறைவே. மேற்படி எங்களது மையங்க ளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாளர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த னர். ஊரடங்கு காரணத்தினால் அவர்களது பயிற்சி தடைபட்டுள் ளது. மேலும் உடற்பயிற்சி மையங் கள் அனைத்தும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களால் வாடகை கட்டிடங்களில் இயக்கி வருகின்றோம். மேற்படி மையங் கள் மூடப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக வாடகை மற்றும் பயிற்சியாளர்களின் சம்பளம், வங்கி கடன் தொகைக்கான மாதத் தவணைகள் செலுத்த இயலவில்லை. தற்போது எங்க ளது வேண்டுகோளை ஏற்று உடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதி அளிக்க வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.